Thursday, December 17, 2009

மாவீரன் வந்தியத்தேவன்



எப்பொழுதும் எங்கள் மக்கள் மத்தியில் நிலையான இடம்பிடித்துள்ள சக்தி FM வானொலியின் மற்றுமொரு வித்தியாசமான முயற்சி சரித்திர வானொலி நாடகத் தொடர். இதுவரை காலமும் வானொலியில் இவ்வாறான ஒரு சரித்திர வானொலித் தொடர் இடம்பிடித்ததில்லை என்பதை யாரும் மறுக்க முடியாதெனவே நான் கருதுகிறேன். இத்தொடரின் முன்னோட்ட நிகழ்ச்சிகளுக்கே எமது நேயர்களின் வரவேற்ப்பு மிகச் சிறப்பகவுள்ளமை இதன் வெற்றிக்கு சான்றேனலாம்.

இத்தொடர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலையும், இந்திய வரலாறையும், எமது கற்பனையையும் கொண்டு உருவாகும் மிகப் பெரிய தயாரிப்பாகும். இத்தொடரை எழுதி இயக்குபவர் நண்பன் ராஜ்மோகன். சக்தியின் ஏனைய அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இலங்கையின் பிரபலமான நடக்கக் கலைஞர்கள் நடிக்கும் இந்த சரித்திரத் தொடரில் எமது நேயர்களில் நாடக நடிப்பில் ஆர்வமுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து. அவர்களையும் நடிக்கச் செய்ய முயற்ச்சிகள் எடுத்துள்ளோம்.

ஊடகம் என்கின்ற நிலையில் எப்போதும் சக்தி FM தனது போருப்பையுனர்ந்து செயட்பட்டுல்லத்தை அனைவரும் பல சந்தர்ப்பங்களில் பார்த்துள்ளனர். அதேபோன்ற ஒரு சமூக உணர்வோடு எமது நாட்டில் இப்போது நலிவடைந்துவரும் நாடகக் கலையை ஓரளவாவது தலைநிமிரச்செய்யவே இந்த முயற்சி. இதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை எமக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள :
fmvanthiyan.blogspot.com

Tuesday, November 10, 2009

உலகின் கனவுக் கன்னி




உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர்.

மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார்.

பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார். மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.

இந்த நிலையில் 5/8/1962_ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.

அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார்.

டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது.

அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது.

இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது.

தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஆங்கில நடிகை சோபியா லாரன் இந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு ஆங்கில நடிகையான ஜீனா லோலாபிரி கிடா கூறும்போது, "இது பெரிய அதிர்ச்சியான செய்தி. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர் (மர்லின் மன்றோ) மிகவும் நல்லவர்" என்று சொன்னார்.

அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது.

மன்றோவைப்பற்றி வர்ணிப்பது என்றால் தங்க நிற தலைமுடி, எப்போதும் புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்பார்கள்.

மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்ததை யாரும் மறந்துவிடலாகாது.

மர்லின் மன்றோ 1926 ம் ஆண்டு ஜுன் மாதம் 1 ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகர ஆஸ்பத்திரியில் பிறந்தார். மர்லின் மன்றோ தந்தை அவள் பிறக்கும் முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் பிறந்தபோது அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லை. எனவே அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார்.

வீட்டு வேலைகள் செய்யும் பருவம் வந்ததும் அனாதை விடுதியை விட்டு வெளியேறினார். பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற சிறிய வேலைகளை பார்த்து வந்தார். ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பந்துபோல் அங்கும் இங்கும் அடித்து விரட்டப்பட்டார். கல்யாணம் ஆன பிறகாவது வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்ற ஆசையில் 16_வது வயதில் ஜேம்ஸ் என்ற வாலிபரை மணந்தார்.

ஆனால் அவரும் ஒழுங்கானபடி வேலை செய்து பிழைக்காததால் தகராறு ஏற்பட்டது. 1 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின்பு விமான கம்பெனியில் `பாரசூட்' ரிப்பேர் பார்க்கும் வேலை செய்தார். அதன் பின் படம் வரைவதற்கு மாதிரி (மாடல்) பெண்ணாக நிற்க முயற்சித்தார். ஆனால் அதற்குகூட லாயக்கு இல்லை என்று அவரை எல்லோரும் விரட்டினார்கள்.

எனவே கையில் பணம் இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தார். விளம்பரங்களுக்கு நீச்சல் உடையில் தோன்றுவது மூலம் காலம் தள்ளினார். அதன் பிறகு நடிப்பு ஆசையால் ஆலிவுட் நகரில் உள்ள சினிமா பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார்.

வாடகை பணம் கொடுக்காததால் தங்கி இருந்த வீட்டை விட்டு துரத்தினார்கள். இருக்க இடமின்றி நடு ரோட்டில் நிற்கவேண்டியது ஆயிற்று. எனவே ஒரு காலண்டருக்காக நிர்வாணமாக "போஸ்" கொடுத்தார். இதில் 250 ரூபாய் வருமானம் வந்தது. அதை வைத்துக்கொண்டு மீண்டும் சினிமா உலகில் புக முயற்சி செய்தார்.

பத்திரிகையில் வந்த மன்றோவின் படத்தைப் பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்ய அழைத்தார்கள் 2 படக்கம்பெனிக்காரர்கள். ஆனால் முதல் படத்தில் பேசக் கிடைத்த வசனம் ஒரு ஒரே வார்த்தை. அதுவும் படம் வெளிவரும்போது வெட்டப்பட்டுவிட்டது.

ஆனால் படங்களில் ஒரு நிமிடம் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மர்லின். படம் வரையக்கூட லாயக்கு இல்லை என்று வர்ணிக்கப்பட்ட மர்லின் மன்றோ ரசிகர்களால் சினிமா உலக தேவதையாக வர்ணிக்கப்பட்டார்.

மர்லின் மன்றோவின் கவர்ச்சியான உடல் அழகில், நடை அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள். பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பெரிய படக்கம்பெனி வருடத்திற்கு 55 லட்சம் ரூபாய் வீதம் 7 வருடத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தது.

மர்லின் மன்றோவின் சொந்தப் பெயர் நார்மாஜின் டென்சன் என்பது. 3 முறை திருமணம் செய்தார். மூவரையும் விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் ஜேம்ஸ், போலீஸ்காரர். 2_வது கணவர் கால்பந்து வீரர். பெயர் ஜேர்டிமாக்கியா. 3_வது கணவர் சினிமா படத்தயாரிப்பாளர் ஆர்தர்மில்லர். மர்லின் மன்றோவுக்கு பிடித்தமான நடிகர் மார்லன் பிராண்டோ.

3_வது கணவரான மில்லருடன் வாழ்க்கை நடத்தும் போது மர்லின் மன்றோவுக்கு 2 தடவை கருச்சிதைவு ஏற்பட்டது. குழந்தை பிறக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் கடைசிவரை அவருக்கு குழந்தை இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இருவருடைய மறைவுக்குப்பிறகு பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.

கென்னடியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மர்லின் மன்றோ தவறாமல் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம் என்றும், இவர்களுடைய காதல் விவகாரம் கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்குத் தெரிந்து அவர் கென்னடியுடன் ஆத்திரத்துடன் சண்டை போட்டார் என்றும் பத்திரிகைகள் எழுதின. எப்படி இருப்பினும், மர்லின் மன்றோவுக்கு இணையான உலகப்புகழ் பெற்ற நடிகை அவருக்கு முன்பும் இல்லை; பின்பும் இல்லை.

Wednesday, November 4, 2009

உலகெங்கும் வேகமாக உருகி வரும் பனிமலைகள்




திபெத், இமாலயம், கிளிமஞ்சாரோ, கென்யா, தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் உள்ள பனிமலைகள் மிக விரைவாக உருகிவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

திபெத்தில் உள்ள மலைத்தொடர்களில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருகி வருவதாக சீன சுற்றுச் சூழல் ஆய்வாளர்களும், இயக்கத்தினரும் கவலை வெளியிட்டுள்ளதோடு, எவ்வளவு வேகமாக உருகி வருகின்றன என்பதயும் ஆவணப்படுத்தியுள்ளனர்.

புவி வெப்பமடைதலால் அதிகரித்து வரும் தினசரி வெப்ப நிலை குறித்த எச்சரிக்கைகளை இந்தியாவும் சீனாவும் இதுவரை வெறும் எச்சரிக்கைகளாக மட்டுமே எடுத்து‌க் கொண்டுள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக சீன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திபெத் பனிச் சிகரங்கள் வெகு வேகமாக உருகி வருவது நாம் நினைப்பது போல் சாதாரண விஷயமல்ல என்பதை கவலையுடன் ஆவணப்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இமாலய மலை உட்பட திபெத் பனி மலைகள் உருகுவதன் அளவு அதிகரித்திருப்பதால் தான் இமாலயத்திலிருந்து உற்பத்தியாகும் நதிகளில் அபாயகரமான வெள்ளம் ஏற்படுவதாக சீன ஆய்வு எச்சரித்துள்ளது.

குவிங்காய்-திபெத் மலைத்தொடர்களில் பனி உருகுவது அதிகரித்து வருவதால் ஏரிகள் பரப்பு விரிவடைவதும் புதிய ஏரிகள் உருவாவதும் நிகழ்கிறது. இதனால் நதிகளில் கடும் வெள்ளங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நீண்ட கால விளைவாக நதிகள் வற்றி விடும் அபாயம் உள்ளது. தற்போது ஜீவ நதிகளாக உள்ள கங்கை, சிந்து போன்ற வற்றாத நதிகள் ஒரு சில பருவ நிலைகளில் மட்டும் தண்ணீர் இருக்கும் நதிகளாக மாறி விடும் அபாயமும் உள்ளது.

தற்போதைய புவி வெப்பமடைதல் அளவுகளின் படி இமாலய பனி மலைகள் இன்னும் 30 ஆண்டுகளில் பனியற்ற ஒரு பிரதேசமாக மாறி விடும் என்று வானிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு தெரிவித்துள்ளது. திபெத் வானிலை மாற்ற கண்காணிப்பு சேவை அமைப்பு சமீபமாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பனிமலைகளில் ஆண்டொன்றிற்கு 131.4 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பிற்கு பனி உருகிவருவதாக தெரிவித்துள்ளது. பனிப் படலங்கள் ஒவ்வொரு ஆண்டும் 350 மீட்டர்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது திபெத் பகுதியில் சீனாவின் எந்த ஒரு பகுதியைக் காட்டிலும் வெப்ப அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று குவின் என்கின்ற ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கிறார். இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பொதுவாகவே பனிச் சிகரங்கள் கடந்த 40 ஆண்டுகளில் 7% குறைந்துள்ளதாக சீன விஞ்ஞான கழகம் தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்த விஞ்ஞானக் கழகத்தின் இயக்குனர் யாவோ டான்டாங் அளித்துள்ள பேட்டியில் "கடந்த 2000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திபெத் பனிச் சிகரங்களில் வெப்பமடைதலின் தாக்கம் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் குவிங்காய் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வெள்ளை யானை போல் மலைகள் என்று ஒரு சிறுகதை மூலம் டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ பனிமலைத் தொடரை அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே வர்ணித்தது ஞாபகம் இருக்கலாம். ஆனால் இப்போது இந்தப் பனிமலையும் வெகு வேகமாக உருகி வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

1912ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ பனிச்சிகரங்களில் இருந்த பனியின் அளவு 2007ஆம் ஆண்டிற்குள் 85% குறைந்துள்ளது.

இதே போன்ற மாற்றங்கள் கென்யாவில் உள்ள பனிமலைகளிலும், ஆப்பிரிக்காவில் உள்ள ருவென்ஸோரி பனிச்சிகரங்களிலும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் உள்ள அடர்ந்த பனிச்சிகரங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது.

கிளிமஞ்சாரோவை பொறுத்த வரை 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மலைப்பகுதியின் வடக்கில் உள்ள பனியின் அளவு 1.9 மீட்டர்களும், தெற்கு பகுதியில் 5.1 மீட்டர்களும் உருகியுள்ளது என்று ஒஹியோ பலகலைக் கழக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இயற்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த உலக வெப்பமயமாதலை தடுக்க நாம் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடமுடியுமென சற்றுச் சிந்தித்து செயற்படுவோமாக...

108 ஆண்டுகளுக்கு பின் அரிய சூரிய கிரகணம்



108 வருடத்திற்கு பிறகு வரும் 'கங்கண சூரிய கிரகணம்' வரும் ஜனவரி 15ம் தேதி நிகழ்க்கிறது.

அரிய நிகழ்வாக 2010 ஜனவரி மாதம், இரண்டு கிரகணங்கள் நிகழவுள்ளன. புத்தாண்டு அன்று முதல்நாள் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

ஜனவரி 15ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இக்கிரகணம் இலங்கையின் வடக்குப்பகுதிகளில் ஓரளவு தெளிவாகத் தெரியும்.

இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பானது. இதற்கு முன்னர் 1901ம் ஆண்டு நவம்பர் 11ம் நாள் கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது.

மீண்டும் 2019 டிசம்பர் அன்றுதான் கங்கண சூரியகிரகணம் இலங்கையில் தெரியும். புவியை நிலவு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3 லட்சத்து 57 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புவியை விட்டு விலகி செல்கையில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவு இருக்கும்.

தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்றம் சிறியதாக இருக்கும். எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இதனையே கங்க சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.

Saturday, September 19, 2009

9-வது உலகத் தமிழ் மாநாடு

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிய மொழி இல்லையென்று சின்ன வயதிலிருந்து எல்லோரும் சொல்கிறோம். ஆனால் இந்த தமிழ் மொழிக்கு நாம் என்ன செய்கிறோமென்று கொஞ்சமாவது?


இல்லையே?

ஆனால் தமிழ்மொழியைக் காதலிக்கும், உயிருக்கு உயிராய் மதிக்கும் பலர் தமிழுக்குத் தொண்டாற்றப் பல வழிகளைத் தேடுகின்றனர். உலகில் இருக்கும் தமிழறிஞர்கள் பலரையும் ஒரே இடத்தில் கூட்டி உலகத் தமிழ் மாநாடு நடத்தும் திட்டமும் இதில் ஒன்றுதான்.

உலகத் தமிழ் மாநாடு பலமுறை உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

முதலாவது உலகத் தமிழ் மாநாடு 1966, ஏப்ரலில் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஒருங்கிணைத்தார். இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையில் 1968 ம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் முதல் நாள் சென்னை கடற்கரையில் தமிழ் அறிஞர்களான திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி. யு. போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ. உ. சி, வீரமாமுனிவர் ஆகிய 9 பேரின் சிலைகள் திறக்கப்பட்டன. இவர்களோடு தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரமான கண்ணகியின் சிலையும் திறக்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தினார்.

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு சனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையை ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. யாழ் நகரம் சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் விழாக் கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன. 1974 ஆம் ஆண்டில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர் பேராசிரியர் வித்தியானந்தன் ஆவார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ல் மதுரையில் 5-வது மாநாடும், பின்னர் மலேசியாவில் 6-வது மாநாடும், மோரிஷஸில் 7-வது மாநாடும், 1995-ல் தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன.

13 ஆண்டுகளைக் கடந்த பிறகும் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கான அறிகுறிகள் இப்போதுதான் தென்படத் தொடங்குகின்றது.
தற்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களினால் அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆண்டுகளின் பின் 9 வது உலகத் தமிழ் மாநாடு தமிழகம் கோவையில் அடுத்த ஆண்டு (2010) சனவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும்பட்சத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி, வரலாறு, அகழ்வாய்வுகள், கலைகள், தொன்மை, மொழியியல் பற்றியும் பல ஆராய்ச்சி உண்மைகள் வெளி வரும்.
மேலும், ௧௩ ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், ஆய்வேடுகள் மாநாட்டில் வாசிக்கப்படும். அப்போது தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

நமது பெருமையும், சிறப்பும் பழைமையோடு நின்றுவிடாமல் மாறிவருகின்ற வரும் உலகில் தமிழர்களாகிய நாமும் புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும்.

உலகளவில் தமிழ் ஆய்வில் ஆர்வத்தை உருவாக்குவதோடு கடல் கடந்து பல நாடுகளிலும் வாழுகின்ற நம் தமிழ் உறவுகளிடையே ஒற்றுமையுணர்வை வளர்க்கப் பாடுபட முயலவாவது வேண்டும்.
1995-ம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் முயற்சியால் 8-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
தமிழ் மீது அளவற்ற பற்றுடன், தமிழுக்கு செம்மொழித் தகுதியை பெற்றுத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சியே.

வாழ்க தமிழ் வளர்க அதை வாழவைப்போர் சேவை....

Thursday, September 3, 2009

சாதனைச் சந்திராயன் 1...

சந்திரனை ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து நிலவுக்கு முதன்முதலாக இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய 'சந்திராயன் 1 ' விண்கலம் திடீரென செயலிழந்தது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாது பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இரண்டுவருடம் செயற்படும் என எதிர்பார்த்த இந்த விண்கலம் பத்து மாதத்திலேயே செயலிழந்தது அதிர்ச்சியை தருவது நியாயம்தானே..

இருந்தாலும் இந்திய முன்னாள் அணு விஞ்ஞானியும் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் மற்றும் பல விஞ்ஞானிகள் இந்த 'சந்திராயன் 1' விண்கலத் திட்டம் வெற்றியளித்துள்ளதகக் கூறியுள்ளனர். இது அனுப்பப்பட்ட நோக்கத்தில் 90% பூர்த்தியாகியுள்ளதேனவும் அறிவித்துள்ளனர்.

நிலவின் மேற்பரப்பை 'சந்திராயன் 1'விண்கலம் எடுத்தனுப்பிய படங்களிலிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில், அமெரிக்காவினால் அனுப்பப்பட்ட 'அப்பலோ 15' என்ற விண்கலம் நிலவைச் சென்றடைந்ததா என்பதில் இருந்துவந்த சந்தேகம் தற்போது தீர்ந்துள்ளது. 40 ஆண்டுகளுக்குமுன் நிலவில் அந்த விண்கலம் ஏற்படுத்திய கோடுகளைச் 'சந்திராயன் 1' விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

'சந்திராயன் 1' விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த அதி நவீன (ஹைபெர் ஸ்பெக்டல்)கேமரா மூலமாகக் பல்வேறு படங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமே 'அப்பலோ 15' நிலவில் இறங்கிய இடமும், அது நடந்தபோது ஏற்பட்ட அடையாளங்களும் மிகத் தெளிவாகத் தென்படுகின்றதாம்.

அதேபோல் விண்வெளிவீரர்கள் பயணம் செய்த தானியங்கி ரோபோக்கள் சென்ற பாதைகளும் படம்பிடித்து அனுப்பப்பட்டுள்ளன. நிலவின் மேட்பரப்பிலுள்ள கருப்பு நிறத் தூசிகள் உள்ளன. அதில் இந்தப்பாதைகள் தெளிவாகத் தெரிகின்றன.

எனினும் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ரோங் மற்றும் எட்வின் ஆல்ரின் ஆகியோரது கால்த் தடங்கள் மிகவும் மங்கலாகவே தென்படுகின்றன.
கனிய வழங்கள் குறித்து 'சந்திராயன் 1' அனுப்பிய படங்களிலிருந்து நிலவின் மேற்பரப்பில் கால்சியம் இருப்பது தெளிவாகியுள்ளது. குறைந்த அடர்த்தி மற்றும் இரும்புப் பற்றாக்குறை காரணமாக அவை மிதக்கின்றனவாம்.

நிலவில் இன்னும் எத்தனை எத்தனை மர்மங்கள் உள்ளனவோ?

Sunday, August 30, 2009

இப்படியும் சொல்லுறாங்க...

வழமையாக வாரநாட்களில் காலை 6 மணிமுதல் 10 மணிவரை வானொலியில் நான் மொக்கை போடும் நிகழ்ச்சி வணக்கம் தாயகம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயம் தொடர்பாகப் பேசுவது வழக்கம்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை வணக்கம் தாயகம் நிகழ்ச்சி செய்ய யாரும் இல்லாததால் திடீரென நான் நிகழ்ச்சிக்கு வந்தேன். வழமையாகவே நிகழ்ச்சிக்கு வந்திருந்தபின்பு தான் அன்றைய தலைப்பு என்ன என்பது பற்றி யோசிப்போம். நேற்றும் அப்படித்தான். எதைப்பற்றி கதைப்பதேன்று கையில் கிடைத்த பத்திரிகையைப் புரட்டியும்,TV channel களை சுழற்றியும், இணையத்தளங்களை அலசியும் பார்த்ததில் ஒரு விஷயம் சிக்கியது.


நகைச்சுவையாக தத்துவங்கள் சொல்லுங்க என்று அழைத்தேன். வந்துகுவிஞ்சுது பாருங்க... சரி சரி அதில சிலவற்றை இங்கே பதிகிறேன் வாசித்துத்தான் பாருங்களேன்.


01. மீன் பிடிச்சா மீனவன். மான் பிடிச்சா மாணவனா?

02. என்னதான் தீக்கொழியாக இருந்தாலும் அவிச்ச முட்டை போடமுடியாது.

03. Tea cup இற்குள்ள tea இருக்கும், World cup இற்குள்ள world இருக்குமா?

04. Phone இல் signal கிடைக்கும், signal இல் phone கிடைக்குமா?

05. முட்டைத் தோசைக்குள் முட்டை இருக்கும், வெங்காயத் தோசைக்குள் வெங்காயம் இருக்கும், plain தோசைக்குள் plain இருக்குமா?

06. Pencil box இல் pencil வைக்கலாம். Iron box இல் iron வைக்கலாமா?

07. Bus stand இல் Bus நிற்கும், கொசு stand இல் கொசு நிற்குமா?

08. Phone இற்குள் sim ஐப் போடலாம், ஆனால் sim இற்குள் phone ஐப் போடலாமா?

09. மீன் வலையில் மீன் இருக்கும், கொசு வலையில் கொசு இருக்குமா?

10. பாம்பு வந்தால் படம் எடுக்கும், படம் எடுத்தால் பாம்பு வருமா?

11. முயலும் ஜெய்க்கும், ஆமையும் ஜெய்க்கும், ஆனால் முயலாமை ஜெய்க்காது.

12. Phone இற்கு bill கிடைக்கும், ஆனால் bill இற்கு phone கிடைக்குமா?

13. Tea glass இல் tea ஐப் பிடிக்கலாம், sun glass இல் sun ஐப் பிடிக்கலாமா?

14. கடிகாரம் எவ்வளவுதான் ஓடினாலும், அதனால் olympic இல் ஓட முடியாது.

15. கொய்யா மரத்தில கொய்யாப்பழம் இருக்கும். தென்னைமரத்தில் தென்னம்பழம் இருக்குமா.

16. என்னதான் dialog sim போட்டாலும் தும்மும் போது Hatch என்றுதான் தும்மவேண்டும்.

எப்பீடீ.......

Wednesday, August 26, 2009

எவ்வளவு செய்திட்டோம் இதைச் செய்ய மாட்டோமா?

எவ்வளவு செய்திட்டோம் இதைச் செய்ய மாட்டோமா? இது விஜய் வசனம் தான். ஆனால் இது ஜதார்த்தத்தில் எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது???
நம்ம விஜய் அகில இந்திய காங்கிரசில் இணையப்போறாராம்... என்ன கொடுமை விஜய் இது?

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் விஜய்.இதனால் காங்கிரசில் விஜய் இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக வணக்கம் தாயகத்தில் பேசிவிட்டு வந்து 10 மணிக்கு இணையத்தை தட்டிப் பார்த்தபோது ஐ...யோ.. என்றானது. இதை அறிந்த உங்களில் பலருக்கும் அப்பிடித்தான் இருந்திருக்கும்.

வெகு விரைவில் "சோனியா அம்மையார் தைரியமான பெண்மணி" அது இது என்று நம்ம தமிழ்த் தாத்தக்கணக்கா (மு.கருணாநிதி) விஜய் அனல் பறக்கப் பேசுவார் பாருங்க. காரணம் விரைவில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் தளபதி.


இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் ( ஆமா வட்டம், சதுரம், செவ்வகம் எல்லாமேதான்) தெரிவிக்கின்றன.

விஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது வலையமைப்பைப் பலப்படுத்தியும் வருகிறார். அதுமட்டும் இல்லாமல் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம்.

விஜய்யின் இந்த வலையமைப்பை அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு, அதுவும் அவர் ஒரு கட்சியின் தலைவராக மாறும் முன்னரே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என விரும்பியே ராகுல் காந்தி, டெல்லிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.



இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியுள்ளார். அதாவது தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


தனிக்கட்சி தொடங்கிய விஜய்காந்த், சரத்குமார் எல்லோருமே அடுத்து என்னசெய்வது என்று தலையைச் சொறிந்துகொண்டு ததிங்கினதோம் போடுவதால், வேண்டாம் விஷப்பரீட்சை என்ற தனது நலம் விரும்பிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், காங்கிரசில் மட்டுமே நடிகர்கள் யாரும் இல்லை என்பதால், அதில் இணைய அவர் முடிவெடுத்துள்ளாராம்.


ராகுல் காந்தியிடம் தனது விருப்பத்தைச் சொன்ன விஜய், விரைவில் சோனியா காந்தி முன்னிலையில் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொள்வாரம்.

இதுபற்றி விஜய் தரப்பில் கேட்கப்பட்ட போது, இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்பதே பதிலாக வந்துள்ளதாம்.

அரசியல் ஆசை யாரைத்தான் விட்டுது.... பார்க்கலாம் பார்க்கலாம் விஜயின் அரசியல் அவதாரம் அவரின் அண்மைய திரைப்படங்கள் போல் இல்லாவிட்டால் சரி..

Monday, August 24, 2009

ஒளிரும் தங்கப்பையன்..

"விளையாட்டுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் தடகள விளையாட்டுன்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும்..." என்ன இது வெற்றிவிழா பட வில்லன் வசனம் போல இருக்கு என்று யோசிக்கிறீங்களா?
Cricket பற்றியே எல்லோரும் பேசும் போது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது உலக தடகளப் போட்டி. பல வீரர்கள், பல வேதனைகள், பல சாதனைகள் என நடந்து முடிந்த இப்போட்டிகளில் உலகமே வியந்து பேசியது ஒரே ஒரு வீரரைப்பற்றித்தான்.


"அடடே என்ன வேகமா ஓடுறார் " என்று மூக்கில் விரல் தடகளத்தில் போல்ட் பெற்ற தான் ஜமைக்காவின் "ஒளிரும் தங்கப்பையன்" உசைன் st.லியோ போல்ட். (Usain st. Leo Bolt)



உசைன் st.லியோ போல்ட், 1986 ஆகஸ்ட் 21 ஆம் திகதி பிறந்த ஜமைக்க அதிவேக ஓட்டவீரர். அண்மையில் 100 m மற்றும் 200 m ஓட்டங்களிலும், தனது சக வீரர்களுடன் இணைந்து 4 X 100 m அஞ்சலோட்டத்திலும் பதக்கம் வென்றுள்ள இவர் 2008 ஒலிம்பிக்கில் இந்த பிரிவுகளிலும் சாதனைபுரிந்துள்ளார். போல்ட், 2008 கோடைகால ஒலிம்பிக்கில் மேற்குறிப்பிட்ட மூன்று ஓட்டப் பிரிவுகளிலும் தங்கம் வென்று 1984 ஆம் ஆண்டு கார்ல் லெவிஸ் ஏற்படுத்திய சாதனையை முறியடித்ததோடு ஒரே ஒலிம்பிக் போட்டியில் மூன்று உலக சாதனைகளை ஏற்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டார்.

2004 ஆம் ஆண்டு முழுநேர தடகள வீரரான போல்ட், ஆரம்பத்தில் சில போட்டிகளில் பங்குபட்ட முடியாது போனாலும் 2004 கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். 2008 மே மாதம் தனது முதல் 100 m பிரிவில் உலக சாதனையை 9.72 வினாடிகளில் ஓடி நிகழ்த்திக்காட்டிய போல்ட், 2008 Beijing ஒலிம்பிக் போட்டியில் 100 m மற்றும் 200 m ஓட்டப்பிரிவுகளில் மீண்டும் உலக சாதனையை நிலைநாட்டினார். 100 m பிரிவில் தனது 9.72 என்ற நேரப்பெருதியை முறியடித்து, 9.69 வினடிகளிலும் 200 m பிரிவில், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் Michael Johnson ஏற்படுத்திய 19.32 என்ற நேரப்பெருதியை முறியடித்து 19.30 வினாடிகளில் ஓடி உலக சாதனை புரிந்தார். Beijing ஒலிம்பிக் நிறைவடைந்தது சரியாக ஒரு வருடத்தின் பின் ஆகஸ்ட் 2009 இல் Berlin Germany இல் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் 100 m மற்றும் 200 m பிரிவுகளில் முறையே 9.58 மற்றும் 19.19 வினாடிகளில் ஓடித் தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். Digital நேரக் கணிப்பு முறை ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு பதிவான ஆகக்குறைந்த நேரப்பெருதி, போல்ட் ஏற்படுத்திய 9.58 என்ற சாதனை நேரம்தான்.

தடகளத்தில் போல்ட் பெற்ற வெற்றிகளை கருத்திற்கொண்டு 2009 ஆம் ஆண்டின் உலகப் பிரசித்திபெற்ற விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதுமட்டுமில்லாது "Lighting Bolt" (ஒளிரும் போல்ட்) எனவும் செல்லமாக அழைக்கப்படுகின்றார்.

உசைன் போல்ட் 1986 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஜமைகாவிலுள்ள Trelawny என்னும் இடத்திலுள்ள Sherwood என்னும் சிறிய நகரத்தில் பிறந்தார்.

அப்பா - Wellesely Bolt
அம்மா - Jennifer Bolt
சகோதரர் - Sadeeki Bolt
சகோதரி - Sherine Bolt

இவரது பெற்றோர் அவர்களின் ஊரில் ஒரு பலசரக்குக் கடை நடத்தி வந்துள்ளனர். போல்ட் சிறுவயதில் தனது சகோதரருடன் தெருக்களில் cricket மற்றும் உதைப்பந்தாட்டம் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். சிறுவயதில் விளையாட்டைவிட வேறு எதைப்பற்றியும் சிந்திததில்லை என போல்ட் ஒரு பெட்டியிலே கூறியுள்ளார்.

அவர் ஆரம்பத்திலே கல்விகற்ற Waldensia Primary எனும் பாடசாலையிலேயே தனக்குள் மறைந்திருந்த ஓட்டத்திறமையை முதன்முதலில் வெளிப்படுத்தினார். தனது 12 ஆவது வயதில் 100 ம இல் பாடசாலையின் அதிவேக ஓட்டவீரராகத்திகழ்ந்தார் போல்ட்.

போல்ட் William Knibb ஞாபகார்த்த உயர் பாடசாலையில் கல்விகற்கும் காலத்தில் வேறு விளையாட்டுக்களிலும் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் அவரின் cricket பயிற்சியாளர் அவரைத் தடகளத்தில் அதிக கவனம் செலுத்தினால் சிறந்த எதிர்காலம் உண்டு எனக்கூறி அதற்கு வழிநடத்தினார்.



போல்ட்டின் ஆரம்பகால தடகளப் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களான Pablo McNeil மற்றும் Dwayane Barrett. பாடசாலை மட்டப்போட்டிகளில் போல்ட் திறமையை வெளிப்படுத்தினாலும் பயிற்சிகளில் போதிய அர்ப்பணிப்பின்மை மற்றும் இயற்கையாகவேயுள்ள நகைச்சுவையுணர்வு என்பன McNeil இற்கு வருத்தத்தையே ஏற்படுத்தியது.


2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கரிபியன் தீவுகளுக்கிடையேயான CARIFTA போட்டிகளில் 400 M மற்றும் 200 M பிரிவுகளில் போல்ட் வெள்ளிப் பதக்கத்தை பெற்றதுடன் 400 m பிரிவில் தன் சொந்த சிறந்த ஓட்டப்பெருதியைப் பெற்றார். அதே ஆண்டு Debrecen, Hungary இல் நடந்த IAAF உலக இளையோர் தடகளப் போட்டிகளில் முதன்முதலில் சர்வதேச ரீதியாகப் பங்குபற்றினார். ஆனால் அதில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியாதுபோனது. அப்போதும் அலட்சியமாகவே நடந்துகொண்டார்.

போல்ட்டின் நகைச்சுவைத் தன்மையால் ஒருமுறை போலீசிலும் மாட்டிக்கொண்டார். அதன் பின்பே அவர் தன்னை கொஞ்சம் சுதாகரித்துக்கொண்டு சர்வதேசப் போட்டிகளில் தனது திறமைகளை மிகவும் அபரிமிதமாக வெளிப்படுத்தினார்.

இதை அவதானித்த ஜமைக்காவின் முன்னாள் பிரதமர் P.J.Patterson அவர்கள் Kingstan சென்று பிரத்தியேகப் பயிற்சிபெற ஒழுங்கு செய்துகொடுத்தார்.

கடுமையான பயிற்சிகள் அர்ப்பணிப்புத்தன்மை என்பவற்றினால் போல்ட் தனது திறமையினை கொஞ்சம் கொஞ்சமாக மெருகூட்டி பல சர்வதேசப் போட்டிகளுக்குச் சென்று மிளிர ஆரம்பித்தார். 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற Athens ஒலிம்பிக் போட்டியில் கால் உபாதை காரணமாக முதற்ச்சுற்றிலேயே வெளியேறவேண்டியேற்பட்டது. அடுத்த ஒலிம்பிக்கிற்காகக் காத்திருந்த போல்ட் 2008 இல் சதனையாளரானார்.

2008 Beijing ஒலிம்பிக் போட்டியில் 100 m மற்றும் 200 m ஓட்டப்பிரிவுகளில் உலக சாதனையை நிலைநாட்டினார். 100 m பிரிவில் தனது 9.72 என்ற நேரப்பெருதியை முறியடித்து, 9.69 வினடிகளிலும் 200 m பிரிவில், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் Michael Johnson ஏற்படுத்திய 19.32 என்ற நேரப்பெருதியை முறியடித்து 19.30 வினாடிகளில் ஓடி உலக சாதனையை ஏற்படுத்தினார். தனது சக வீரர்களுடன் இணைந்து 4 X 100 m அஞ்சலோட்டத்திலும் 37.10 வினாடிகளில் ஓடி உலக சாதனையை ஏற்படுத்தி தங்கம் வென்று பதக்கங்களின் உறைவிடமானார்.





Berlin Germany இல் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் 100 m மற்றும் 200 m பிரிவுகளில் முறையே 9.58 மற்றும் 19.19 வினாடிகளில் ஓடித் தனது சாதனையை தானே முறியடித்தார்.

போல்டிற்கு மிகவும் பிடித்த விஷயம் நடனமாடுவது. 2004 ஆம் ஆண்டு முதல் போல்ட் தனது சிறுவயது நண்பியான Mizicann Evans என்பவரை காதலித்துவருகிறார்.

போல்ட் ஓட்ட வீரராக வந்திராவிட்டால் cricket இல் வேகப்பந்து வீச்சாளராக வந்திருப்பாராம். அதுமட்டுமில்லை உசைன், பாகிஸ்தான் அணியின் Waqar Younis, இந்திய அணியின் Sachin Tendulkar, மேற்கிந்தியத் தீவுகளின் Chris Gayle மற்றும் ஆஸ்திரலியா அணியின் Matthew Hayden ஆகியோரின் விசிரியாவார். இவருக்கு உதைப்பந்தாட்டம் என்றாலும் அதிகம் பிடிக்கும். அதிலும் இவர் Manchester United பரம ரசிகர்.

காலத்திற்குக் காலம் சாதனை நாயகர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். "Lighting Bolt" இன் சாதனைப்பட்டியல் தொடரட்டும்.

வாழ்த்துக்கள் Bolt...

Tuesday, August 11, 2009

என்ன கொடுமை சார் இது....

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... இந்தப்பாட்டுத்தான் இப்ப எமது நாட்டுக்கு பொருந்துமோ என்று நினைக்க வேண்டியிருக்கு. யுத்தம் யுத்தம் என்று செத்த சனத்தை டெங்கு பிடித்து டொங்கு டொங்கு ஆட்டி ஓய்ந்த பாடில்லை அதற்கிடையில் புதிதாய் ஒரு பன்றியின் பாய்ச்சல்.

எங்கேயோ மெக்சிகோவில் தானே வந்திச்சு இங்கேயெல்லாம் வராது என்று இருந்தால், வச்சாய்ங்களே ஆப்பு....
எமது பக்கத்து நாடு இந்தியாவில் cricket score மாதிரி மணிக்கொரு தடவை பன்றிக்காய்ச்சலினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சுக்கொண்டே போகுது. எப்போ இலங்கையில் பன்றிக்காய்ச்சலினால் இறந்தவர் தொடர்பான முதல் அறிவிப்பு வருமோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கு.

வருமுன் காப்போம் என்பதுதானே எங்களின் தாரக மந்திரம். எனவே நான் அறிந்துவைத்துள்ள சிலவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளத் தீர்மாணித்தேன்.

சாதாரண காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் எப்படி வித்தியாசத்தை உணர்வது என்று பலருக்கும் குழப்பம்.

சாதாரண காய்ச்சலைப் போன்றே அனைத்து விஷயங்களும் பன்றிக் காய்ச்சலுக்கும் இருக்கும். காய்ச்சல் வந்ததும் உடல் சோர்வு, சளி பிடிப்பது என பன்றிக் காய்ச்சலுக்கும் அப்படித்தான் இருக்கும்.

பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்கள் பலருக்கு மூக்கு ஒழுகுதல், கழுத்தில் நெறி கட்டுதல், வாந்தி, பேதி போன்றவை ஏற்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளில் இரண்டுக்கு மேற்பட்டவையாக இருந்தால் அது பன்றிக் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம்.

இருமல் தொடரும்; தொண்டை வலிக்கும்; மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கலாம். பசி எடுக்காது; சாப்பிட்டாலும் வாந்தி வரும். வயிற்றுப்போக்கு இருக்கும்; களைப்பு ஏற்படும். அதிக உடல் வெப்பம், தசை வலி, வேலை செய்ய முடியாத நிலை. அடிக்கடி கோபம், எரிச்சல், உளைச்சல் ஆகியன ஏற்படும். நீலம் மற்றும் சாம்பல் நிறமாகத் தோல் காட்சியளிக்கலாம். தோல் எரிச்சல் ஏற்படும்.

சளி பிடித்தால் ஏற்படும் பிரச்சினைகள், பன்றிக் காய்ச்சலில் விரைவாக ஏற்படும். சுமார் 2, 3 வாரங்கள் காய்ச்சல் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி உணர்வார்கள். தசை வலி ஏற்படும். அவ்வப்போது உடல் சூடு அதிகமாகும், சில சமயம் குறையும்.

ஆனால் இந்த அறிகுறிகளை வைத்தே ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவி இருக்கும் என்பதை உறுதிபடுத்த முடியாது. மருத்துவமனைக்குச் சென்று முழுப் பரிசோதனை செய்த பின்னரே பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் கடந்த 10 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலோ, பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.

சுய மருத்துவம்

சுயமாக மருந்தகத்திற்குச் சென்று ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். சாதாரண பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் சளி, காய்ச்சலுக்கு வேண்டுமானால் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயனளிக்கும். ஆனால் இதுபோன்ற தொற்று நோய்களுக்கு ஆன்டி பயாடிக் பயனிக்காது. நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

தடுப்பு மருந்து

இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் இதுவரை இல்லை. அதற்கான சோதனைகள் துரிதமாக நடந்து வருகின்றன.

அதிக பாதிப்பு யாருக்கு

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் எளிதாக பரவ வாய்ப்புள்ளது. மேலும், நுரையீரல் நோய், ஆஸ்துமாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள்.இதய நோய், கல்லீரல் நோய், ஈரல் நோய் உடையவர்கள்.நீரிழிவு நோய் உள்ளவர்கள்கர்ப்பிணிப் பெண்கள்65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் பன்றிக் காய்ச்சலால் அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளவர்களாவர்.

எப்படி பரவுகிறது

பன்றிக் காய்ச்சல் கிருமி எளிதாக தொற்றும் இயல்புடைது. ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்கள் இரும்பும் போது அல்லது தும்மும் போது அவர்கள் வாய் அல்லது மூக்கில் இருந்து வெளியேறும் சிறு துளியின் வழியாகவே இந்த கிருமிகள் வெளியே வருகின்றன.

ஒருவர் தும்மும் அல்லது இரும்பும் போது கையை வைத்து மறைக்காமல் இருந்தால் காற்று வழியாக அந்த கிருமிகள் அருகில் இருப்பவரை தாக்குகிறது. அல்லது அவர் கையை வைத்து வாயை மூடிக் கொண்டால் அவரது கையில் அந்த கிருமிகள் அமர்ந்து கொண்டு, அவர் அடுத்ததாக தொடும் பொருட்களில் எல்லாம் பரவுகிறது. அந்த பொருட்களை அடுத்ததாக யார் தொட்டாலும் அவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது

தடுக்க முடியுமா

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க இன்புயன்சா ஆன்டிவைரல் மருந்து பயன்படும். இந்த மருந்தை பன்றிக் காய்ச்சல் பாதிக்காதவர்கள் பயன்படுத்தலாம். ஆனால், இந்த மருந்தை பயன்படுத்தினாலும், நம் பக்கத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்தவர் இருக்கும்போது இந்த மருந்து 70 முதல் 90 விழுக்காடு அளவிற்கு மட்டுமே பயனளிக்கும்.

பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க

இரும்பும் போதும், தும்பும் போதும் பயன்படுத்தியதும் அப்புறுப்படுத்தும் காகிதத்தைக் கொண்டு வாயையும், மூக்கையும் மூடவும். பின்னர் உடனடியாக இந்த காகிதத்தை கவனமாக அப்புறப்படுத்தவும். ஒவ்வொரு முறையும் உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவும். அவ்வப்போது ரிமோட், கதவு பிடிகள் போன்ற அனைவரும் உபயோகிக்கும் பொருட்களை கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தவும். காய்ச்சல் அல்லது சளி இருக்கும் போது மற்றவர்களுடன் பழக வேண்டாம்.

அடிக்கடி சுத்தமான நீரை பருகுங்கள். உடலில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வெளியில் அதிக கூட்டம் இருக்கும் இடத்திற்குச் செல்லும் போது முகக் கவசம் அணிவது நல்லது. ( இது கொஞ்சம் கஷ்டம் தான்)
வீடுகளில் செய்ய வேண்டியவை

சோப்பும், தண்ணீரும் 30 விழுக்காடு பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும். அவ்வப்போது கைகளை கழுவுங்கள்.


வெளியில் செல்லும் போது உங்கள் கண்கள், மூக்கு, வாய்ப் பகுதியைத் தொடுவதைத் தவிர்க்கவும்.சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும், மருத்துவமனையில் பணிபுரிபவர்களும் அதிக சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பசலைக் கீரை, உருளைக் கிழங்கு, பீன்ஸ், தானியங்கள், மாமிசம், பால், மீன் போன்றவற்றில் பி12 விட்டமின் உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டியவை


உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம். குழந்தைகளை அவ்வப்போது கைகளைக் கழுவ வைக்க வேண்டும். ஒருவரை ஒருவர் நெருக்கமாக அமர வைக்கக் கூடாது. பயன்படுத்தி தூக்கி எறியும் காகிதங்களை வகுப்புகளில் அதிகமாக விநியோகிக்க வேண்டும்.

ஏதோ எனக்குத்தெரிந்த சிலவற்றை பதிந்துள்ளேன்.

இந்தப்பதிவின் நோக்கம் பன்றிக் காய்ச்சல் பீதியை ஏற்படுத்துவதில்லை, எச்சரிக்கையை ஏற்படுத்துவது மட்டுமே.


ஹேய் பன்றிக்காய்ச்சலே! எம் ஊரைவிட்டு, எம் நாட்டைவிட்டு, எம் உலகைவிட்டுப் பறக்கக் கடவாய்...




Monday, August 10, 2009

முடிவைத்தேடி....

ரொம்ப நாளாவே ஏதாவது எழுதி மீண்டும் வலைப்பூவில் பிரவேசிக்கலாம் என்று இருந்தாலும் நேரம் கிடைப்பது நரிக்கொம்பாவே (ஒரு வித்தியாச்த்துக்கு குதிரை நரியாக்கிட்டுது) இருந்ததாலே எழுதவே முடியல்லை. இப்ப எப்பிடியும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி எழுத வேணும் என்று தீர்மானிச்சு தான் எழுத ஆரம்பிக்கிறேன். அதுதான் தீர்மானிச்சாசில்ல எழுத ஆரம்பிக்க வேண்டியதுதானே என்று நீங்க சொல்லுறது தூரத்தில கேக்குது. சரி சரி எழுதிறன்..


இப்ப ஒன்றரை வருட காலமாவே இலங்கையின் special தேர்தல். தேர்தல் தினத்தில் தேர்தல் முடிவை அறிவிக்க நமது அலுவலகத்தில் இருந்து அரச தகவல் திணைக்களத்துக்கு போறது அடியேன்தான். ஒவ்வொரு முறையும் விதம் விதமான சுவாரஷ்யமான சம்பவங்கள் இடம்பெறுவது வழமை. இம்முறையும் அப்படியே.


இந்தமுறை (August 08) ஊவா மாகணசபை, யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபை என மூன்று பகுதிகளில் தேர்தல், சகல முடிவுகளும் வந்து சேர எப்படியும் அடுத்த நாள் (August 09) ஆகும் என்று நினைத்து தலைவலி, இருமல் என்று அப்பதான் ஏதாவது வந்து தொலைக்கும் என்பதால் அதுக்கான நிவாரணிகளுடன் இரவு 08 மணிக்கு தகவல் திணைக்களத்துக்கு சிங்கம் single ஆக ஆஜரானது.


அங்கே எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கண்ணாடிக்கூண்டுக்கு போய் நேரடி ஒலிபரப்புக்கு தேவையான ஒழுங்குகள் எல்லாம் பக்கவா இருக்கா என்று சரிபார்த்தபோது ஒரு சின்ன விஷயம் மூளையின் ஏதோவொரு மூலையில் பொறியாய் சுட்டது. அது தேர்தல் முடிவு வெளிவரும் வாசலுக்கும் எங்களுக்கு வழங்கப்பட்ட கண்ணாடிக்கூண்டுக்கும் இடையில் இருந்த அதிகதூரம் தான்.


தேர்தல் முடிவை விரைவாக முதலில் எமது நேயர்களுக்கு தர இது பெரியளவில் தடையாக அமையும் என்பதால் எமது பொறியியல் நண்பரிடம் mic மற்றும் headphone இரண்டையும் முடிவு வெளிவரும் வாசலுக்கு அருகிலேயே நீண்ட wire மூலம் இணைத்து தரும்படிகேட்டுவிட்டு, எமது நிலைய NEWS 1st மற்றும் ஏனைய ஊடகங்களிலிருந்து (தமிழ், சிங்கள) யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று நோட்டம்விட சென்றேன். 70% தெரிந்த வழமையாக வரும் பார்த்த முகங்கள்தான். எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு முக்கியமான ஒரு விஷயத்திற்காக ஒரு முக்கிய நபரைத் தேடினேன்


யார் அந்த முக்கியமானவர்?


வேற யார், இரவு முழுவதும் இலவசமாக சாப்பிடுவதற்கான token வழங்கும் புண்ணியவான் தான் அவர். ஒருவிதமாக அவரை கண்டுபிடித்து எனக்குரிய token ஐ வாங்கிக்கொண்டுபோய் இரவு சாப்பாட்டையும் yogurt ஐயும் தண்ணீர் போத்தலையும் வாங்கி பத்திரப்படுத்திவிட்டு (விடியும் வரை வேற தண்ணீர் போத்தல் தரமாட்டாங்க) ஊடகத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சிலரோடு கொஞ்ச நேரம் இன்றைய தமிழ் ஊடகத்துறை பற்றி பேசமுடிந்தது.


இரவு 10 மணி....
சக்தி FM தேர்தல் சிறப்பு நேரடி ஒலிபரப்பை கலையகத்தில் இருந்த மயூரனுடன் தொடர்புகொண்டு ஆரம்பித்துவிட்டு முதல் தேர்தல் முடிவுக்காக காத்திருந்தோம்.


முதல் முடிவு பெரும்பாலும் நள்ளிரவு 12 மணிக்கு வரும் என்று எதிர்பார்த்து MTV மற்றும் MBC இற்கு முடிவு வழங்கப்படும் இடத்தில் இருந்து மட்டையடித்துக்கொண்டு இருந்தோம். கொடுமை என்னவென்றால் வழமையாக தூக்கம் வரக்கூடதேன்று பெரிய திரையில் படம் போடுவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே DVD ஐயே போட்டு ஒரு விதமா தூக்கம் வரவச்சுடுவாங்க. அன்றைய தினமும் இந்த கொடுமையை அனுபவிச்சுக்கொண்டு அங்கங்கே காதில் விழுந்த A ஜோக்குகளையும் ரசித்துக்கொண்டு காத்திருந்தேன்.


நள்ளிரவு 12 மணி....
தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு ungle வெளியில் வந்து standby (தயாராக இருக்கட்டாம்) என்று சொல்லிவிட்டு போனார். நானும் கலையகத்தில் இருப்பவர்களை தயாராகும்படி சொல்லிவிட்டு முதல் முடிவுக்காக தயாரானேன்.


தேர்தல் முடிவை வெளியில் கொண்டு வருபவரிடம் முதலில் வாங்கிக்கொண்டு (பறித்துக்கொண்டு) வந்து வாசிக்கும் எங்களிடம் தர என எமது அலுவலகத்தில் இருந்து அழைத்துப்போனவரும் தயாரானார்.


முடிவைக் கொண்டுவருவது கண்ணில்பட்டதும் கலையகத்தில் "அடி" எனக் கத்தினேன். அடுத்த கணம் தேர்தல் முடிவை அறிவிப்பதற்கான intro வை ஒலிபரப்பும் அதேவேளை தேர்தல் முடிவைக்கொண்டு வெளியில் வந்த நண்பரிடமிருந்து பறித்துக்கொண்டு வந்து எமது அலுவலக நண்பர் முடிவை கையில் தந்தார். எங்கிருந்தோ வந்த உற்சாகம் உடலில் பரவ முதல் முடிவை அறிவித்தேன்.


முதல் முடிவு மொனராகலை தபால் மூல முடிவு. அதன் பின்பு வவுனியா, யாழ்ப்பாணம் என முடிவுகள் வர ஆரம்பித்தன. எதிர்பார்த்தது என்னவோ முடிவுகள் வரத் தாமதமாகும் எனத்தான், ஆனால் நினைத்ததை விட விரைவாகவே எல்லா முடிவுகளும் வந்தன.

முடிவுகள் வர எடுக்கும் நேர இடைவெளியில், கொஞ்சம் ஜோக்ஸ், கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் அரட்டை என நேரம் நன்றாகவே கழிந்தது. ஒன்றன்பின் ஒன்றாக முடிவுகள் வழமைக்கு மாறாக விரைவாகவே வந்தன. நிறைவுநேரம் வர நானும் எனக்கு தெரிந்த கணக்கைப்போட்டு எந்தக்கட்சி எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது என அறிவித்துக்கொண்டிருக்கும் போதே இறுதிமுடிவையும் கையில் கொண்டுவந்து தந்தார்கள்.

காலை 05.20 மணி....
இறுதி முடிவு கையில்... வழமையாக மதியம் வரை செல்லும் இந்த கல்யாணம் (அதுதான் சிங்களத்தில் "maghula" என்று சொல்லுவாங்களே) இம்முறை காலை 05.20 மணிக்கே முடியும் குஷியில் தேர்தல் சாராம்சம் சொல்ல ஆரம்பித்தேன்.

காலை 05.30 மணி....
ஒரே மூச்சில் 10 நிமிடம் பேசி முடித்து "நன்றி வணக்கம்" சொன்ன அடுத்த நிமிடம் எமது பொறியியல் நண்பரிடம் " okkama ivaraai machchaan. galavanda" என்று சொல்லிய அடுத்த 15 ஆவது நிமிடம் எனது வீட்டில் .... எனது கட்டிலில் கொர்ர்ர் கொர்ர்ர்..........