Sunday, July 27, 2008

சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் ஒரு புதிய கோள்

சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் ஒரு புதிய கோளை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வியாழனைப் போன்ற அளவு கொண்ட இந்தப் புதிய கோள், சூரியனைவிட சற்று பெரிய நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் கோள் கடந்த ஜூலை 3-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் புதிய கோள் 9.2 நாள்களில் தனது நட்சத்திரத்தை சுற்றிவிடுகிறது.

சுற்று வேகமும் அதன் எடையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த கோளுக்குரிய நட்சத்திரமும் இந்த கோளும் கிட்டத்தட்ட ஒரே வேகத்தில் சுற்றுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய கோள்களின் கண்டுபிடிப்பு பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் உயிரினம் வசிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கோரட் என்ற செயற்கைக் கோளை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2006-ம் ஆண்டு செலுத்தினர்.

இந்த செயற்கைக் கோள் 555 நாள்கள் விண்வெளியில் பயணம் செய்து இதுவரை 50 ஆயிரம் நட்சத்திரங்களைக் ஆய்வு செய்து வந்துள்ளது. இதுவரை 307 புதிய கோள்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குடும்பத்தை காப்பாற்றியது கிளி

அதிகாலை வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்திலிருந்து, ஒரு குடும்பத்தையே காப்பாற்றியுள்ளது, அவர்கள் வளர்த்து வந்த கிளி.

தெற்கு இங்கிலாந்தில், ஹாம்ப்ஷைரில் வசிக்கிறார் பிரான்சிஸ் ஹால். இவரது மகன்கள் டிரேவர்(40), சாம்(18) ஆகியோரும் உடன் வசிக்கின்றனர். இவர்கள் மூன்று வயது ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளியை வளர்த்து வருகின்றனர். இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் சமையலறையில், மைக்ரோ ஓவனிலிருந்து ஏற்பட்ட தீ, சமையல் அறையில் பரவியது. இதையடுத்து சாம் பெயரையும், பிரான்சிஸ் பெயரையும் அழைத்து கிளி கத்தியது. தீ பரவி, ஹாலுக்கும் வந்ததை அடுத்து, கிளியின் கூச்சல் பெரிதும் அதிகமானது. கிளி அழைப்பதை உணர்ந்து விழித்து பார்த்தபோது தான் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது, மூவருக்கும் தெரியவந்தது. இதையடுத்து, கிளியுடன் மூவரும் உயிர் தப்பினர்.

"எங்கள் கிளி, குடும்பத்தாரின் உயிரை காப்பாற்றியுள்ளது. சரியான நேரத்தில் நாங்கள் விழித்திருக்கா விட்டால், உயிருடன் எரிந்திருப்போம். நாங்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும், ஜன்னல் வெடித்துச் சிதறியது; வீடு முழுவதும் தீ பரவி விட்டது' என்று திகிலுடன் விவரித்தார் சாம்.

Friday, July 25, 2008

புகையிலையில் இருந்து புற்றுநோய்க்கு நிவாரணி

புற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்ற புகையிலையில் இருந்து கூட குறிப்பிட்ட வகை புற்றுநோய் ஒன்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர்.

புகையிலையில் கண்டறியப்பட்டுள்ள குறிப்பிட்ட ஒரு வகை இரசாயனத்தைக் கொண்டு குருதிப் புற்றுநோய் வடிவம் ஒன்றுக்கு (follicular B-cell lymphoma) (இது Non-Hodgkin lymphoma வகைகளில் ஒன்று) எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தோற்றுவிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர்.

எனினும் இந்த ஆய்வு இப்போ ஆரம்பப் படிநிலையிலேயே இருக்கின்றது. மேலும் பல நிலை ஆய்வுகள் இது தொடர்பில் தொடரப்பட வேண்டி இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஆண்களை அதிகம் தாக்கும் புரஸ்ரேட் புற்றுநோய்க்கு (Prostate cancer ) எதிராக Abiraterone எனும் மருந்தை பாவனைக்கு அனுமதிப்பது குறித்து இறுதிக் கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருந்து குறிப்பிட்ட புற்றுநோயை உருவாக்கத் தூண்டும் ஓமோனை நிரோதித்து புற்றுநோய்த் தாக்கத்தை தடுக்க உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மாத்திரை வடிவில் மருத்துவ சந்தையில் கிடைக்க இருக்கிறது.!

Tuesday, July 22, 2008

மலேரியாவுக்கு எதிர்ப்பைக் காட்டும் மரபணு எயிட்ஸை ஊக்குவிக்கும் அவலம்.

மலேரியா தாக்கத்தை அதிகளவில் எதிர்கொள்ளும் சூழலைச் சந்திக்கும் ஆபிரிக்கக் கண்டத்தைச் சார்ந்த மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து மலேரியாவை எதிர்க்க என்று கூர்ப்படைந்த "DARC" மரபணுவைக் கொண்டவர்களிடத்தில் அதே நோய்க்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டவர்களைக் காட்டினும் சுமார் 40% அதிகரித்த அளவில் எயிட்ஸ் தாக்கம் ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர்.

மலேரியாவுக்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணு உடலில் chemokines எனும் இரசாயனத்தின் அளவில் செல்வாக்குச் செய்து, எயிட்ஸ் நோய்க்கான வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போராட வசதி அளிப்பதாகக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்.. மலேரியாவின் பெருக்கத்தால் பெருமளவிலான மக்கள் இந்த மரபணுவில் கூர்ப்படைந்த மரபணுவையே தற்போது காவி வரும் நிலையை அடைந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். எனினும் இந்த மரபணுக் கூர்ப்பைத் தூண்டும் குறிப்பிட்ட காரணியை விஞ்ஞானிகள் இன்னும் தெளிவாக இனங்காண முடியவில்லை.

அதுமட்டுமன்றி கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டுள்ள மக்கள் எயிட்ஸுக்கு எதிராக அதிக காலம் தாக்கும் பிடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளமை குறித்தும் மேலும் தெளிவான விபரங்கள் அறியப்பட வேண்டி இருக்கின்றன என்று இவ்வாய்வுகளைச் செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி sickle cell அனீமியா குறைபாட்டைக் காண்பிக்கும் மரபணுவைக் கொண்ட மக்கள் மலேரியாவை எதிர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளனர் என்பதும் முன்னர் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது.

இந்தக் கண்டுபிடிப்புக்கள்.. மரபணுகள் சார்ந்து உருவாகும் அல்லது நிகழும் உடலிரசாயனக் கூறுகளின் மாற்றங்கள், நோய்களில் செய்யும் செல்வாக்குப் பற்றிய மேலதிக படிப்புக்களையும் கண்டுபிடிப்புக்களையும் செய்ய உதவியாக அமையும் என்பதை எதிர்பார்க்கலாம். இவை பிற்காலத்தில் இந்த நோய்களை எதிர்த்துப் போராடக் கூடிய பொறிமுறைகளைக் கண்டறிய உதவியாகவும் அமையலாம்.

மலேரியாவுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு

உலகில் குறிப்பாக வெப்ப வலைய நாடுகளில் வருடத்துக்கு பல ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி எடுக்கும் மலேரியா நோய்க்கு புதிய வகையில் சிகிச்சை அளிக்கக் கூடிய முறை ஒன்றை அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மலேரியா நோயை உருவாக்கும் புரட்டோசோவா (Protozoa) வகை ஒட்டுண்ணி நோயாக்கி குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களுள் புகுந்து கொண்டு குறிப்பிட்ட காலம் வாழ்வதால் அவ்வாறு ஒட்டுண்ணிகள் புகுந்து கொண்ட செங்குருதிக் கலங்களை உடலில் உள்ள நிர்ப்பீடணம் (immune system) இனங்கண்டு தாக்காதிருக்க உதவும் புரதப் பசைப் படையை உருவாக்கும் 8 புரத மூலக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 8 புரத மூலக்கூறுகள் சேர்ந்து ஆக்கப்படும் அந்த பாதுகாப்புப் பசையில் ஒரு புரத மூலக்கூறின் உற்பத்தியை தடுத்தாலே அதன் செயற்பாட்டைத் தடுத்து ஒட்டுண்ணி நோயாக்கி புகுந்து கொண்டுள்ள செங்குருதிக் கலங்களை இலகுவாக தாக்கி அழிக்க வகை செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Monday, July 21, 2008

அதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி


இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளிற்கான அடிப்படைக் கூறை (கடவுளின் துகளை) கண்டறிய என்று, பிரான்ஸ் - சுவிஸ் எல்லைகளூடு நிலத்தின் கீழே உருவாக்கப்பட்டுள்ள 27 கிலோமீற்றர்கள் பரிதியுடைய வட்டக் குழாய் வடிவ Large Hadron Collider இல் திரவ நிலைக் கீலியத்தையும் பல ஆயிரம் மின்காந்தங்களையும் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உணரப்படும் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையை உருவாக்கி இருக்கின்றனர்.


இதில் உணரப்பட்ட வெப்பநிலை 1.9 கெல்வின் (K)(-271C; -456F) ஆக இருக்கிறது. விண்வெளியில் ஆழமான பகுதியில் வெப்பநிலை கிட்டத்தட்ட 2.7 கெல்வின் ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


உலகிலேயே பிரமாண்டமான பெளதீகவியல் பரிசோதனைக் கூடமாக விளங்கும் இந்த Cern lab இல் அமைக்கப்பட்டுள்ள Large Hadron Collider (LHC) நடத்தப்படவிருக்கும் பரிசோதனையில், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் எதிர் எதிர் திசைகளில் நேர் ஏற்றமுள்ள புரோத்திரன் (Proton)களை மோதவிட்டு அவை மோதிச் சிதறும் வேளையில் பிறக்கும் துகள்கள் பற்றி ஆராய இருக்கின்றனர்.


இத்துகள்களினை தன்மைகளை அடையாளம் கண்டுவிட்டால் பிரபஞ்சத்தில் சடப்பொருட்களை ஆக்கியுள்ள அணுக்கள் கொண்டுள்ள உப அணுத்துணிக்கைகளை ஆக்கியுள்ள பிரதான அடிப்படைக் கூறை அல்லது கூறுகளை இனங்காணலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.


இவற்றையே அவர்கள் கடவுளின் துகள் அல்லது துகள்கள் என்று கருதுகின்றனர்.இதற்கிடையே இந்தப் பரிசோதனையால் செயற்கையான கறுப்போட்டை அல்லது கருந்துளை (Black hole) ஒன்று பூமியில் செயற்கையாக உருவாக்கப்படக் கூடிய சூழல் இருப்பதால் அது பூமிக்கு ஆபத்தாக அமையலாம் என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.


எதுஎப்படியோ European Organization for Nuclear Research (CERN) அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த LHC ஆய்வு கூடம் தனது கடவுளின் துளைத் தேடும் பரிசோதனையை செய்ய ஆரம்பித்துக் கொள்ள இருக்கிறது என்பதையே மேற்குறிப்பிட்ட அதி குளிர் சூழல் உருவாக்கம் உணர்த்தி நிற்கிறது. இந்தப் பரிசோதனையின் போது மிகப் பெருமளவிலான சக்தி உருவாக்கப்படுவதோடு.. பெருமளவு வெப்பமும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால்.. ஆழமான விண்வெளியில் உள்ளது போன்ற இந்த அதி குளிர் சூழல் என்பது இப்பரிசோதனைக்கு முக்கியமான ஒன்றாகும்.

Wednesday, July 16, 2008

Kaviyarasu Vairamuthu’s 55th B’day on July 13th

வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார். "கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.


வாழ்க்கைக் குறிப்பு


தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலை பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.


இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருடைய மகன் கபிலன்.


படைப்புகள்


கவிதைத் தொகுப்பு


  • வைகறை மேகங்கள்

  • சிகரங்களை நோக்கி

  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்

  • தமிழுக்கு நிறமுண்டு

  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

  • இதனால் சகலமானவர்களுக்கும்

  • இதுவரை நான்

  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்

  • பெய்யென பெய்யும் ம‌ழை

  • நேற்று போட்ட கோலம்

  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்

  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்

நாவல்



  • தண்ணீர் தேசம்

  • கள்ளிகாட்டு இதிகாசம்

  • கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)

விருதுகள்



  • சாகித்ய அகாதமி விருது

  • சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது (ஐந்து முறை). விருது பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)
    முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)
    ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)
    கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)
    சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
    கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)

  • கலைமாமணி விருது (1990)

Tuesday, July 8, 2008

2 "சிம்"செல்போன் அறிமுகம்

ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ என 2 தொழில்நுட்பங்களிலும் இயங்கும் திறனுள்ள புதியரக செல்போன்களை மெரிடியன் மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, மெரிடியன் மொபைல் நிறுவனத்தின் ஃப்ளை பிராண்ட்-ன் V80, V80i, B700 மற்றும் B720 ரக செல்போன்களில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.1.85 இன்ச் டி.எஃப்.டி வண்ணத்திரை, 200 எஸ்எம்எஸ் சேகரிக்கும் வசதியுடன் கூடிய, V80 ரக செல்போனின் விலை ரூ.4,490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. V80i ரக செல்போனில் கூடுதலாக எஃப்.எம் ரேடியோ மற்றும் ஸ்பீக்கர் போன் உள்ளது.

இதேபோல் B700 ரக செல்போனில் 2 மெகா பிக்சல் கேமரா, புளூடூத், ஜிபிஆர்எஸ், மெமரி ஸ்லாட் வசதிகள் உள்ளது. இதன் விலை ரூ.7,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எட்ஜ் (EDGE) தொழில்நுட்பம் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட B720 Duo ரக செல்போனின் விலை ரூ.8,900 என மெரிடியன் மொபைல் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, July 6, 2008

செயற்கை இரத்தக் குழாய்

மருத்துவத் துறையில் பல்வேறு சாதனை களைப் படத்துள்ள விஞ்ஞானிகள், தற் போது செயற்கை முறை யில் உடல் பாகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறான செயற்கை முறையில் இரத்த குழாய்களை உருவாக்கியுள்ளனர் சோச் சூசெட்ஸ் அமெரிக்க தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள். செயற்கை முறையில் பெரிய அளவிலான இரத்த குழாய்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன என்றாலும் மிக நுண்ணிய அளவில் இரத்த குழாய்கள் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

இதனைப் பரிசோதிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக, மிருகங்களுக்கு இதனைப் பொருத்தி சோதனை செய்து வருகின்றனர்.

ஒலிவ் எண்ணெய் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது...

சமையலுக்கு ஒலிவ் எண்ணெய்யைப் பாவிப்பதால் சுமார் 9% புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்று கிறீஸ் மற்றும் ஸ்பெயின் வாழ் மக்களிடம் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் கிறீஸ் மக்களிடம் புற்றுநோய் மற்றும் இதய நோய் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைந்திருப்பதற்கு அவர்களின் உணவுப்பழக்கமே முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது.

அதிகம் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளையும், ஒலிவ் எண்ணொய், மீன் உணவுகளையும், சிவப்பற்ற இறைச்சிகளையும், சீரியல் வகைகளையும் மற்றைய உணவுகளை விட உண்பது புற்றுநோய் மற்றும் இதய நோய்களைக் குறைக்க உதவும் என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒலிவ் எண்ணொய் அதிக அளவு நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறிதொரு ஆய்வில் புறோக்கோலி (Broccoli) மற்றும் cruciferous வகை மரக்கறிகளை நாளாந்த உணவில் சேர்த்துக் கொள்வது ஆண்களில் புறஸ்ரேற் (prostate) புற்றுநோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். புறோக்கோலியில் உள்ள இயற்கையான இரசாயனங்கள் ஆண்களில் புறஸ்ரேற் சுரப்பியில் உள்ள மரபணுக்களில் குறிப்பாக GSTM1 எனும் மரபணு மீது செல்வாக்குச் செய்து இந்த நோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Tuesday, July 1, 2008

நிறைவான காலை உணவு உடல் நிறையைக் குறைக்கும்.

குறைவான காலை உணவை உண்பதால் மதியமும், இரவும் மற்றும் இடையிலும் என்று அதிகளவான உணவை உள்ளெடுக்கத் தூண்டும் அல்லது காலை உணவைத் தவிர்த்து மற்றைய வேளைகளில் அதிக அளவு உணவை உட்கொள்ளத் தூண்டுகிறது.

நிறைவான காலை உணவை உண்பதால் மதிய மற்றும் இரவு வேளைகளில் உள்ளெடுக்கும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ள முடிவதோடு உடல் நிறையையும் சீராகக் குறைக்க முடியுமென்று அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறைந்தளவு காபோவைதிரேற்று (மாப்பொருள் உணவுகள்)அடங்கிய காலை உணவை உட்கொள்பவர்களுக்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு உடல் நிறை குறைவது போலத் தோன்றினும் பின்னர் அது அதிகரிக்கும் வகையில் அவர்களில் பசி மற்றும் உணவுத் தேவை தூண்டப்படுகிறது என்றும் இதனால் காபோவைதிரேற்று, நார் பொருட்கள் மற்றும் பழங்கள் அடங்கிய, கொழுப்புக் குறைந்த, நிறைவான காலை உணவை உட்கொள்வதன் மூலம் மிகுதி நாள் முழுவதும் பசித் தூண்டலை மட்டுப்படுத்தவும், அடுத்து வரும் வேளைகளில் உள்ளெடுக்கும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் என்று அமைகின்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதே நிறைக் குறைப்புக்கும் உடல்நலனுக்கும் நல்ல வழிமுறை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுறா மீனில் இருந்து புற்று நோய்க்கு மருந்து


புற்று நோய்க்கு புதுப்புது மருந்துகளை கண்டு பிடிக் கும் ஆராய்ச்சியில் ஆஸ்தி ரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஈடுபட்டனர்.இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு அவர்கள் சுறா மீன் களின் செல்களில் இருந்து புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடித்துள்ளனர். சுறாமீன் செல்களில் உள்ள மரபணுக்களை எடுத்து அவற்றுடன் சோதனை கூடத்தில் புரோட்டீன் களை சேர்த்து அவற்றை நோய் எதிர்ப்பு செல்களாக மாற்றினார்கள்.


இந்த செல்களை உடலில் செலுத்தியதும் அந்த நோய் எதிர்ப்பு செல்கள் புற்று நோய் செல்களை அழித்து விட்டன. அது மட்டு மல்ல மலோசியா, வாத நோய், முட்டு வலி போன்றவற்றுக் கும் இதை மருந்தாக பயன் படுத்தலாம்.

Monday, June 30, 2008

A.M.Raja's 79th B'day on July 1st



ஏ. எம். ராஜா தமிழ் திரையிசையின் முக்கியமான பாடகர்களில் ஒருவர். இயற்பெயர் மால மன்மதராஜு ராஜா 1929 ஜூலை ஒன்றாம் தேதி ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் பிறந்தார். மூன்றுவயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.



கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கிய ராஜா பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச்.எம்.வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வுசெய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப்பகுதிக¨ளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்ரை கேட்க நேர்ந்த ஜெமினி எஸ் எஸ் வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப்படமான 'சம்சார'த்தில் தலைப்புப் பாடலைப்பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.



1951ல் கே.வி .மகாதேவன் ஏ.எம்.ராஜாவை அவரது 'குமாரி ' என்ற படத்தில் 'அழியாத காதல் வாழ்வில்...என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கர்நாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப்பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான மொகம்மத் ர•பி மற்றும் தலத் மெக்மூத் கியோரின் பாட்டுமுறைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை போலிசெய்யமல் தன்னுடைய சுயமான பானியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா. மிக மென்மையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பாடும்முறை என்று அதைச் சொல்லலாம்.



துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ.எம்.ராஜாவை தமிழில் நீங்காப்புகழ்பெறச்செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே தென்றல் உறங்கியபோதும் போன்றவை உதாரணம். மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான டாத மனமும் டுதே, பாட்டுபாடவா பார்த்து பேச வா, ஓகோ எந்தன் பேபி போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல். மைனர் லை•ப் ரொம்ப ஜாலி போன்ற பாடலக்ளையும் அவர் தன் பாணியில் பாடியுள்ளார். முறையான கர்நாடக இசைப்பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ.எம்.ராஜா மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித்தெளி¢வுடன் இயல்பாக பாடியுள்ளார். 'மீண்ட சொற்கம்' படத்தில் வரும் 'கலையே என் வாழ்கையின் ' வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல். 'தேன்நிலவு' படத்தில் வரும் காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.



அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட வாடிக்கை மறந்ததும் ஏனோ கண்மூடும் வேளையிலும் போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட நிலவும் மலரும் இதய வானின் உதய நிலவே கண்ணாலே நான் கண்ட கணமே போன்றவை அவரது குரலின் அழகை முழுக்க காட்டி நம் இழந்த வாழ்க்கையின் இனியதுயரங்களை தொட்டு மீட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ.எம்.ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மாசிலா உண்மைக்காதலே [ அலிபாபாவும் 40 திருடர்களும் ] கண்களின் வார்த்தைகள் புரியாதோ' [களத்தூர் கண்ணம்மா] போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.



ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ.எம்.ராஜா எம்.ஜி.ர், என்.டி ராமராவ், ஏ.நாகேஸ்வர ராவ், ஜெமினி கணேசன் ,சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன் ,பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. அவருடைய பாடல்முறையில் திரைப்பாடல்களுக்கு ஓரளவு தேவை என்றே சொல்லக்கூடிய குரல்நடிப்பு அம்சம் அறவே இல்லை. எந்த நடிகருக்காகவும் அவர் தன் குரலையும் பாடல்முறையையும் மாற்றிக் கொள்ளவில்லை. அவரைப்பொறுத்தவரை பாடல் என்பது போலிசெய்வதோ , நடிப்பதோ அல்ல, இதயபூர்வமானது அது. பாடலை திரைபப்டத்தின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாக எண்ணாமல்ந்திரைப்படத்துடன் ஒத்துப்போகும் ஒரு தனித்த கலையாக அவர் கண்டிருக்கவேண்டும். இந்த அம்சத்தால்தான் அவரது பாடல்கள் அவை இடம்பெற்ற படங்களின் காட்சிகளை மீறி மிகை நடிப்பு, மிகை உணர்ச்சிகளின் துணை இல்லாமலேயே, இன்றும் தனித்து நிற்கின்றன.



ஏ.எம்.ராஜா சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப்பற்றிய படமான 'பக்க இந்தி அம்மாயி ' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்தி அம்மாயி ' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ.எம்.ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்தார்.



1955ல் மகேஸ்வரி என்ற படத்தின் 'அழகு நிலவின் பாவனையிலேஎன்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது. ஜிக்கி ஏ.எம்.ராஜா தம்பதிக்கு று குழந்தைகள். அவர்களில் சந்திரசேகர் ஓரளவு தந்தையின் குரலையும் இசைத்திறனையும் கொண்டவர்.



ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும்தான் பம்பாய்க்குச்சென்று இந்திப்படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் 'ன்' படத்துக்காக. இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹ¤யே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடுமுறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் 'அதி மதுர அனுராகா போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார். சிங்களப்படத்தில்கூட அவர் பாடியிருகிறார்.



பட்டுபோல நம்மை வருடிச்செல்லும் ஏ.எம்.ராஜாவின் குரலும் பாணியும் மேலான இசை ஒருபோதும் உரத்ததல்ல என்று காட்டியபடியே உள்ளன. அவரது குரல் எந்தவிதமான முயற்சியும் தெரியாத அளவுக்கு இலகுவானது. அதே சமயம் எந்த உச்சத்துக்கும் ழத்துக்கும் சாதாரணமாக சென்றுவருமளவுக்கு திறன் கொண்டது. ஒருபோதும் சுருதி விலகாதது. தென்னிந்திய இசைநட்சத்திரங்களில் முற்றிலும் சுருதிசுத்தமான குரல் ஏ.எம்.ராஜாவுடையதுதான்.



இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த சோபா. அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக க்கியது. 1959ல் வந்த 'கல்யாணப்பரிசு' இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். அக்காலத்து மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்று அது. தமிழில் இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவுக்கும் அதுவே முதல் படம்.



ஏ.எம்.ராஜா ஒரு முழுமையான இசைக்கலைஞர். தென்னிந்திய இசையின் ஒரே வெற்றிகரமான 'இசையமைப்பாளர்-பாடகர்' அவர்தான். ஹேமந்த் குமாரை விட்டால் இந்தியிலும் அவருக்கு இணையான ஒரு இசையமைப்பாளர்-பாடகரைக் காணமுடியாது. ஏ.எம்.ராஜா இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் தூய இன்னிசைமெட்டு கொண்டவை, னால் அவையெல்லாம் பெரும்புகழ் பெற்று அவரை வெற்றிகரமான இசையமைப்பாளராக நிலைநிறுத்தின. உதாரணமாக டிப்பெருக்கு என்றபடத்தில் சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..'என்ற பாடல். சுசீலாவின் உச்சத்திற்குபோகும் திறனுக்குப் பதிலாக ழத்திற்குச் [base] செல்லும் திறனை வெளிப்படுத்தும் இப்பாடலின் மெட்டு எத்தனை நுட்பமான திருப்பங்களும் வளைவுகளும் கொண்டு இறுதியில் உச்சத்துக்கு சென்று உலவுகிறது என்பதை கவனித்தால் இத்தகைய மெட்டை எளிதாக நம்மைக் கவரும் ஒரு பாடலாக அமைத்து, அதன் மெட்டுக்கும் பின்னணி இசைக்கும் இடையே துல்லியமான ஒருமையை உருவாக்கியுள்ள ஏ.எம்.ராஜா எத்தனை திறன் வாய்ந்த இசையமைப்பாளர் என்பது புரியும்.



தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ.எம்.ராஜா மட்டுமே. 1952ல் தட்சணாமூர்த்தியின் இசையமைப்பில் 'லோகநீதி' என்ற படம் வழியாக மலையாளத்தில் ஏ.எம்.ராஜா நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச்சொற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. னாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர். கேரளத்தின் முதல் 'சூப்பர் ஸ்டாரா'ன சத்யனின் குரலாக புகழ்பெற்ற ஏ.எம்.ராஜா அறுபதுகளில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார்.



ராஜாவின் பல முக்கியமான பாடல்களுக்கு தேவராஜன் இசையமைத்தார். ராஜா பாடிய பெரியாறே பெரியாறே போன்றபாடல்கள் தமிழ்நாட்டிலும் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தன. பொதுவாக எவரையும் புகழ்ந்து சொல்லாதவரும் குறைவாகப் பேசுபவருமான தேவராஜன் ராஜாவின் குரலின் இனிமையையும் சுருதி சுத்தத்தையும் மட்டுமில்லாது அவரது இனிய குணத்தையும், அர்ப்பணிப்பையும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். வடக்கு கேரளத்தின் காதல்பாட்டுகளான 'மாப்பிளைப்பாட்டு'களின் சாயலில் அமைந்த பல பாடல்களை ராஜா பாடியிருக்கும் விதம் அந்தப் பண்பாட்டின் சாரத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்து இன்றும் மலையாளிகளின் நெஞ்சங்களில் வாழ்கிறது. உதாரணமாக 'உம்மா' படத்தில் வரும் 'பாலாணு தேனாணு ' என்றபாடலில் என் சைனபா ! என்ற அழைப்பில் ராஜா தன் குரல்மூலம் அளிக்கும் உணர்ச்சிகரமான நெகிழ்வு அதை மறக்கமுடியாத காதல்பாடலாக க்குகிறது. கேரளத்தின் என்றும் அழியாத இசைப்பாடல்களில் பல ஏ.எம்.ராஜாவின் குரலில் ஒலிப்பவையே. காச கங்கையுடெ கரையில்.. போன்றபாடல்களை மலையால திரையிசையின் 'கிளாசிக்'குகளாகவே சொல்லலாம்.



தெலுங்கில் ஏ.எம்.ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் அப்பு சேஸி பாப்பு கோடு படத்தில் இடம்பெற்ற 'மூகாவைனா எமி லே' [தமிழில் 'போதும் இந்த ஜாலமே' ]இன்றும் ந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 1954 'விப்ரநாராயணா' படத்தில் இடம்பெற்ற 'சூடுமடே செலியா' 'பாலிஞ்சர ரங்கா' , 1957ல் அக்கா செல்லுலு ப்டத்தில் இடம்பெற்ற 'அந்து மாமிடி போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. தமிழில் நீங்காப் புகழ்பெற்ற 'மாசிலா உண்மைக்காதலே' தெலுங்கில் வந்த 'பிரியதமா மனசு மரேனா' என்ற பாடத்தான். [லிபாபா 40 தொங்கலு]. அலாதீன் அற்புத தீபம் படத்தில் இடம்பெற்ற 'அண்டால கொனெட்டிலோனா' [1957] 'அமர சந்தேசம் 'படத்தில் இடம்பெற்ற 'ஏதோ நவீன பாவம்' என அவரது அழியாப்பாடல்களின் பட்டியலை பெரிதும் நீட்டமுடியும்.



நடுவே திரைவாழ்க்கையில் ஏ.எம்.ராஜாவுக்கு ஓர் இடைவெளி விழுந்தது. தன் மெல்லிசைக்கச்சேரிகள் வழியாக அவர் வாழ்க்கையை நடத்தினார். பல வருடங்கள் கழித்து எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைபபளர் வி.குமார் ஏ.எம்.ராஜாவை அவரே அமைத்துக்கொண்ட அஞ்ஞாதவாசத்திலிருந்து மீட்டு பாடவைத்தார். 'ரங்கராட்டினம்' படத்துக்காக ஏ.எம்.ராஜா பாடிய முத்தாரமே உன் ஊடல் என்னவோ? அன்று மிகப்பெரிய ஒருஅலையாக நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டது. 'புகுந்தவீடு' படத்துக்காக ராஜா பாடிய செந்தாமரையே செந்தேனிதழே... அடுத்த அலை. இரு பாடல்களுமே சங்கர் கணேஷ் இசையமைத்தவை. 1973ல் 'வீட்டுமாப்பிள்ளை' படத்தின்வழியாக இசையமைப்பாளராகவும் ஏ.எம்.ராஜா மறுவருகை புரிந்தார். அதில் வந்த 'ராசி நல்ல ராசி ஒரு வெற்றிப்பாடல்.1975ல் 'எனக்கொரு மகன் பிறப்பான்' படத்திற்காகவும் ஏ.எம்ராஜா இசையமைத்தார். இக்காலகட்டத்தில் 'தாய்க்கு ஒரு பிள்ளை', 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'பத்துமாத பந்தம்', 'அன்பு ரோஜா', 'இது இவர்களின் கதை' போன்ற பல படங்களுக்காக தொடர்ந்து பாடினார். 1970ல் ஏ.எம்.ராஜா மலையாளத்தில் 'அம்ம எந்ந ஸ்திரீ' படத்திற்கு இசையமைத்தார். ஜிக்கியும் எழுபதுகளில் ஒரு மீள்வரவை நிகழ்த்தினார். 1970ல் 'காதலெனும் காவியம்' முதல் 1993 ல் இளையராஜா- விஸ்வநாதன் இசையில் 'செந்தமிழ்பாட்டு' படத்தில் 'வண்னவண்ண மெட்டெடுத்து' வரை அந்த பயணம் நீண்டது.



ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டுதான் இருந்தார். 1989 ஏப்ரல் எட்டாம்தேதி கன்யாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் ரயிலை தவறவிட்டுவிட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோயில் - நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் ரயில் நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால்தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார்.

Sunday, June 29, 2008

"வாட்டர் புரூஃப்" கையடக்க கணினி அறிமுகம்


பிரபல மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான பானாசோனிக், நீர்புகாத (வாட்டர் புரூஃப்) நவீன கையடக்க கணினியை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அறிமுகம் செய்துள்ளது.


Toughbook CF-U1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கையடக்க கணினி (Handheld PC), 7 அங்குல அகலம், 6 அங்குல நீளம் மற்றும் 2 அங்குல விட்டம் மட்டுமே கொண்டுள்ளதால், மிகவும் சிறிதாக காட்சியளிக்கிறது.


நீர்புகாத இந்த கையடக்க கணினி, 1.2 மீட்டர் உயரத்தில் இருந்து தரையில் விழுந்தாலும் எந்த சேதமும் ஏற்படாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.


இன்டெல் நிறுவனத்தின் ஏட்டம் (Atom) பிராசசரை உள்ளடக்கிய இந்த கையடக்க கணினி, வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வர உள்ளது. இதன் அறிமுக விலை 2,499 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 26, 2008

உலகின் முதலாவது சுழலும் மாடிக்கட்டிடம்

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடமொன்றை துபாயில் ஸ்தாபிப்பதற்கான திட்டம் கட்டிடக் கலைஞர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
420 மீற்றர் உயரமான இந்த 80 மாடிக் கட்டிடமானது நியூயோர்க்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் டேவிட் பிஷரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் மாடிகளுக் கிடையில் சுழலும் இயந்திர சாத னங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாடியையும் விரும்பிய திசைக்கு திருப்ப முடியும் என டேவிட் பிஷர் கூறுகிறார்.


இந்தச் சுழலும் மாடியிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பு அலகும் ஒரு சதுர அடிக்கு 3000 டொலர் வீதம், 4 மில்லியன் டொலரிலிருந்து 40 மில்லியன் டொலர் வரையான விலைக்கு விற்பனையாகவுள் ளது. மேற்படி சுழலும் மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஷேக்ஸ்பியர் ஒரு பெண்!!!

புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.


உலகப் புகழ் பெற்ற கவிஞர்களில் ஒருவர் ஷேக்ஸ்பியர். அவரது பல படைப்புகள் இன்றளவும் புகழ் பெற்றவை. ஹேம்லட், ஜூலியஸ் சீசர், கிங் லியர், மெகபத், ஆண்டனி அன்ட் கிளியோபாட்ரா, ஓதெல்லோ, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல புகழ் பெற்ற நாடகங்களையும், சொன்னட்ஸ், வீனஸ் அன்ட் அடோனிஸ், தி ரேப் ஆஃப் லுக்ரீஸ், தி பீனிக்ஸ் அன்ட் தி டர்ட்டிள் உள்ளிட்ட பல கவிதைகளையும் வடித்தவர் ஷேக்ஸ்பியர்.


உலகெங்கும் ஷேக்ஸ்பியருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் விரவிக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் ஷேக்ஸ்பியர் குறித்த பரபரப்புத் தகவலை ஜான் ஹட்சன் என்ற ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.


இவரது கூற்றுப்படி ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண். யூத இனத்தைச் சேர்ந்தவர். ஷேக்ஸ்பியரின் உண்மையான பெயர் அமெலியா பஸனோ லேனியர் பஸனோ என்பதாகும். அமெலியா, 1611ம் ஆண்டு முதன் முதலில் எழுதிய கவிதை சால்வே டியூஸ் ரெஸ் ஜூடாரியம் என்பதாகும். ஒரு பெண்ணால் எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்ட உலகின் முதல் கவிதை இதுதான்.


அமெலியா இங்கிலாந்தில் வாழ்ந்தவர். இவரது படைப்புகளும், ஷேக்ஸ்பியரின் படைப்புகளும் ஒரே மாதிரி உள்ளன. மேலும் அமெலியா தனது படைப்புகளில் பயன்படுத்திய வார்த்தைகளும், கவிதை ஆக்கங்களும், ஷேக்ஸ்பியரின் கவிதைகளுடன் மிகவும் பொருந்தி வருகின்றன.


ஷேக்ஸ்பியரின் படைப்புகளையும், அமெலியாவின் படைப்புகளையும் பார்க்கும்போதும், அவர்களது ஸ்டைல் உள்ளிட்டவற்றை பார்க்கும்போதும், ஷேக்ஸ்பியரின் படைப்புகள் உண்மையில் அமெலியாவுடையது என்று கருத வேண்டியுள்ளது.


இது மிகப் பெரிய உண்மை. அமெலியாவின் படைப்புகளை ஷேக்ஸ்பியர் திருடவில்லை. மாறாக, ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் எழுதியவர் அமெலியாதான். அமெலியா வாழ்ந்த காலத்தில் பெண்கள் கவிதை உள்ளிட்டவற்றை படைக்க, வெளியிட அனுமதி கிடையாது. இதனால்தான் தனது படைப்புகள் வெளியுலகை எட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் அமெலியா கவிதைகளை வெளியிட்டுள்ளார்.


அக்காலத்து இங்கிலாந்தில் பெண்கள் இலக்கிய உலகில் நுழையக் கூட அனுமதி கிடையாது. நாடகங்கள் மட்டுமல்ல கவிதை, கதை என எதையும் எழுத அவர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால்தான் ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் அமெலியா தனது படைப்புகளை வடித்துள்ளார்.


அமெலியாவின் திட்டம் என்னவென்றால், வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரிலேயே தனது படைப்புகள் உலகை வலம் வரட்டும். காலத்தின் கோலமாக உண்மை வெளியே வரும்போது தன்னைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்பதுதான் என்கிறார் ஹட்சன்.


ஹட்சன் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து ஏராளமான பட்டங்களைப் பெற்றவர் ஆவார். ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து விரிவான பல ஆய்வுகளை மேற்கொண்டவர். ஹட்சனின் இந்தக் கூற்று இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8.1 MEGA PIXELS CAMERA PHONE

செல்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமராவை உள்ளடக்கிய புதிய செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. C905 Cyber-shot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன், சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன் (Cyber-shot வரிசையில்) என்ற பெருமையை பெற்றுள்ளது.

செனான் (Xenon) ப்ளாஷ், ஃபேஸ் டிடெக்சன், ஆட்டோ ஃபோகஸ், ஸ்மார்ட் கான்ட்ராஸ்ட் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் 2.4 அங்குல scratch-resistant வண்ணத்திரை உள்ளது.

2 ஜிபி மெமரி ஸ்டிக், யுஎச்பி அடாப்டர் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளுக்கு இதில் உள்ளது, இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இதேபோல் S302 Snapshot என்ற மற்றொரு ரக கேமரா செல்போனில், 2 மெகாபிக்சல் கேமரா, வீடியோ பதிவு செய்வது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதன் உள்ளீட்டு நினைவகத் திறன் 20 எம்.பி. மெமரி கார்டும் பயன்படுத்த முடியும்.

இதுமட்டுமின்றி டார்ச் மற்றும் ரேடியோ வசதி உள்ள J132 மற்றும் K330 என்ற இரண்டு சாதாரண ரக விலை மலிவான செல்போனகளையும் சோனி அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 25, 2008

HANUMAAN IS BACK


இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் (Meghalaya) Garo hills பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சில இடங்களில், காட்டு மனிதன் (அனுமான் உருவ மனிதன்) உயிரி அவதானிக்கப்பட்டுள்ளதாக அதனை அவதானித்த பலரும் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 அடி (3 மீற்றர்கள்) உயரமுள்ள சுமார் 300 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த காட்டு மனிதன் உடல் முழுதும் உரோமத்தால் மூடப்பட்டு கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பதுடன் தாவரபோசணையை உணவுப் பழக்கமாகக் கொண்டிருப்பதாக அவனை அவதானித்த மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காட்டு மனிதன் அல்லது அனுமான் உருவ மனிதன் சிறிய குழுவாக [இரண்டு வளர்ந்தவர்கள் - (ஆண் + பெண்) மற்றும் இரண்டு இளையவர்கள் அல்லது குழந்தைகள் கொண்ட குழுவாக நடமாடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விசேட உயிரி பற்றிய தகவல்களைத் திரட்டி வரும் ஆய்வாளர்கள் இதன் உரோமம் என்று கருதத்தக்க மாதிரியை சேகரித்திருப்பதுடன் காட்டுப் பகுதியில் இவற்றின் 46 சென்ரிமீற்றர்கள் நீளமுள்ள பாரிய பாதங்கள் பதிக்கப்பட்ட அடையாளங்கள் குறித்த தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை இந்த உயிரிகளை நேரடியாக ஒளிப்பதிவு செய்யவோ அல்லது புகைப்படம் எடுக்கக் கூடிய வாய்ப்பையோ, ஆய்வாளர்களோ அல்லது இவற்றை அவதானித்த மக்களோ அவற்றைக் காணும் பொழுதுகளில் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த உயிரியின் இருப்புப் பற்றிய நம்பகத்தன்மை இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.

Kavignar Kannadasan's 81st B'day

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்இயற்
பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம், தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்புமீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம்
1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழாஇறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமிகுடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.

அவள் ஒரு இந்துப் பெண் சிவப்புக்கல் முக்குத்தி ரத்த புஷபங்கள் சுவர்ணா சரஸவதி நடந்த கதை மிசா சுருதி சேராத ராகங்கள் முப்பது நாளும் பவுர்ணமி அரங்கமும் அந்தரங்கமும் ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி தெய்வத் திருமணங்கள் ஆயிரங்கால் மண்டபம் காதல் கொண்ட தென்னாடு அதைவிட ரகசியம் ஒரு கவிஞனின் கதை சிங்காரி பார்த்த சென்னை வேலங்காட்டியூர் விழா விளக்கு மட்டுமா சிவப்பு வனவாசம் அத்வைத ரகசியம் பிருந்தாவனம்


வாழ்க்கைச்சரிதம்

எனது வசந்த காலங்கள் எனது சுயசரிதம் வனவாசம்

கட்டுரைகள்

கடைசிப்பக்கம் போய் வருகிறேன் அந்தி, சந்தி, அர்த்தஜாமம் நான் பார்த்த அரசியல் எண்ணங்கள் தாயகங்கள் கட்டுரைகள் வாழ்க்கை என்னும் சோலையிலே குடும்பசுகம் ஞானாம்பிகா ராகமாலிகா இலக்கியத்தில் காதல் தோட்டத்து மலர்கள் இலக்கிய யுத்தங்கள் போய் வருகிறேன்

நாடகங்கள்

அனார்கலி சிவகங்கைச்சீமை ராஜ தண்டனை

கவிதை நூல்கள்

கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்திரைப்படப் பாடல்கள் - 2 பாகங்களில்பாடிக்கொடுத்த மங்களங்கள்கவிதாஞ்சலிதாய்ப்பாவைஸ்ரீகிருஷண கவசம்அவளுக்கு ஒரு பாடல்சுருதி சேராத ராகங்கள்முற்றுப்பெறாத காவியங்கள்பஜகோவிந்தம்கிருஷண அந்தாதி, கிருஷண கானம்