
கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, ராணி எலிசபெத் முடிசூட்டு விழா. ராணி எலிசபெத்தின் பெரியப்பாவான "எட்டாம் எட்வர்ட்", காதலுக்காக 1936 டிசம்பர் 10 ஆம் திகதி முடிதுறந்தார். அதைத்தொடர்ந்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னரானார். 1937 மே 12 இல் முடிசூட்டு விழா நடந்தது.
ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. ஆறாம் ஜார்ஜ், புற்று நோயினால் பீடிக்கப்பட்டார். இதன் காரணமாக 1951 செப்டம்பரில் அவருக்கு சத்திர சிகிச்சை நடந்தது. அவருடைய ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. 1952 பிப்ரவரி 06 ஆம் திகதி தனது 57-வது வயதில் மரணம் அடைந்தார்.
ஆறாம் ஜார்ஜ் இன் பிறகு இங்கிலாந்து அரசியாக அவர் மகள் எலிசபெத் அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தின் இயற்பெயர் அலெக்சாண்ட்ரா மேரி. 1926 ஏப்ரல் 21 ஆம் திகதி லண்டனில் பிறந்தார். 1947 இல் அவருடைய திருமணம் நடைபெற்றது. மணமகன் பிலிப், திருமணத்துக்குப்பின்னர் "எடின்பரோ கோமகன்" என்று அழைக்கப்படுகிறார்.
பட்டத்துக்கு வரும்போது எலிசபெத்துக்கு வயது 26. முடிசூட்டு விழா 1953 ஜுன் 02 லண்டனில் உள்ள மாதா கோவிலில் மிக கோலாகலமாக நடந்தது. முடிசூட்டு விழாவுக்கு எலிசபெத் ராணி தங்கமயமான கோச்சு வண்டியில் கணவர் எடின்பரோ கோமகனுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்துக்கு முன்பாக குதிரைப்படை, காலாட் படை, பாண்டு வாத்தியக்குழு ஆகியவை அணிவகுத்து சென்றன. ரோட்டின் இருபுறமும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
ஊர்வலம் காலை 9:27 மணிக்கு புறப்பட்டது. கடும் குளிர் வாட்டியது. இடைஇடையே மழை தூறல் போட்டது இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உடலில் போர்வையை போர்த்திக் கொண்டும், பத்திரிகை காகிதங்களை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டும் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தார்கள். ஊர்வலத்தை காண வழி நெடுகிலும் 50 லட்சம் மக்கள் கூடினார்கள்.
சில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. பெண்களும், குழந்தைகளும் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். இந்த முடிசூட்டு விழாவில் பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 8 நாட்டு பிரதமர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் அவர்களும் பவனியாக சென்றார்கள்.
11:32 மணிக்கு ஊர்வலம் மாதா கோவிலை சென்றடைந்தது. இங்கிலாந்தின் தலைமை கிறிஸ்தவ பாதிரியார் (ஆர்ச் பிஷப்) முடிசூட்டு வைபவத்தை நடத்தி வைத்தார். சடங்குகள் எல்லாம் முடிந்ததும் வைரக் கற்கள் பதித்த தங்க மகுடம் எலிசபெத்தின் தலையில் சூட்டப்பட்டது.
பிறகு அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த தங்க சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். கையில் செங்கோல் பிடித்திருந்தார். மகுடாபிஷேகம் முடிந்ததும் சடங்குகளை நடத்தி வைத்த ஆர்ச் பிஷப் மண்டியிட்டு ராணிக்கு மரியாதை செலுத்தினார். மற்ற பாதிரியார்களும் முழங்காலிட்டு நின்று மரியாதை செலுத்தினர்.
பிறகு ராணியின் கணவரான எடின்பரோ கோமகன் தனது மனைவிக்கு (எலிசபெத் ராணி) முன்பாக வந்து நின்று முழங்காலிட்டு விசுவாசப் பிரமாணம் செய்தார். "எடின்பரோ கோமகனான நான், உங்களுக்கு அடிபணிகிறேன். உங்களுக்காகவே வாழ்ந்து, உங்களுக்காகவே உயிர் துறக்க இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்" என்று அவர் விசுவாச பிரமாண உறுதிமொழி எடுத்தார்.
இந்த முடிசூட்டு வைபவத்தை மாதா கோவிலின் மாடிப்பகுதியில் அமர்ந்து இளவரசர் சார்லஸ் (அப்போது அவருக்கு வயது 4) பார்த்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்கு முன்பாக அப்பா மண்டியிட்டு பிரமாணம் செய்து கொடுத்ததை கண்டு ஆச்சரியப்பட்டு கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
எடின்பரோ கோமகனுக்கு அடுத்து ராணியின் உறவினர்களும், பிரபுக்களும் ஒருவர்பின் ஒருவராக சென்று விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தார்கள். மாதா கோவிலில் கூடியிருந்த பிரபுக்களும், மந்திரிகளும், முக்கிய பிரமுகர்களும் ஒன்றுபட்ட குரலில், "கடவுளே! எலிசபெத் ராணியை காப்பாற்றுவாயாக!", "ராணி எலிசபெத் நீடூழி வாழ்க", "ராணி எலிசபெத் சிரஞ்சீவியாக வாழ்க" என்று வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.
பிறகு விஷேச ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ராணி அரண்மனைக்கு பவனியாக சென்றார். அவருக்கு பின்னால் ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் தலைவர்கள், பிரபுக்கள், மந்திரிகளும் பவனி சென்றனர்.
மறுநாள் ராணி எலிசபெத் தனது அரண்மனையில் விருந்து அளித்தார். வெளிநாட்டு தூதர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
முடிசூட்டு விழாவின்போது ராணி எலிசபெத்துக்கு சார்லஸ் (வயது 4), ஆனி (வயது 2) ஆகிய இரண்டு குழந்தைகள். பிறகு 1960 ஆண்ட்ரூவும், 1964 இல் எட்வர்டும் பிறந்தனர். பட்டத்து இளவரசரான சார்லஸ், அழகி டயானாவை மணந்து பிறகு விவாக ரத்து செய்ததும், டயானா கார் விபத்தில் பலியானதும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
உலகின் மிகப்பெரும் கோடீசுவரியாக எலிசபெத் மதிக்கப்படுகிறார். 1993 ஏப்ரல் மாதம் முதல் எலிசபெத் தானே முன்வந்து வருமான வரி செலுத்தி வருகிறார். அவர் கட்டும் வருமான வரி ஆண்டுக்கு சுமார் 750 கோடி ரூபாய்.
ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. ஆறாம் ஜார்ஜ், புற்று நோயினால் பீடிக்கப்பட்டார். இதன் காரணமாக 1951 செப்டம்பரில் அவருக்கு சத்திர சிகிச்சை நடந்தது. அவருடைய ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. 1952 பிப்ரவரி 06 ஆம் திகதி தனது 57-வது வயதில் மரணம் அடைந்தார்.
ஆறாம் ஜார்ஜ் இன் பிறகு இங்கிலாந்து அரசியாக அவர் மகள் எலிசபெத் அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தின் இயற்பெயர் அலெக்சாண்ட்ரா மேரி. 1926 ஏப்ரல் 21 ஆம் திகதி லண்டனில் பிறந்தார். 1947 இல் அவருடைய திருமணம் நடைபெற்றது. மணமகன் பிலிப், திருமணத்துக்குப்பின்னர் "எடின்பரோ கோமகன்" என்று அழைக்கப்படுகிறார்.
பட்டத்துக்கு வரும்போது எலிசபெத்துக்கு வயது 26. முடிசூட்டு விழா 1953 ஜுன் 02 லண்டனில் உள்ள மாதா கோவிலில் மிக கோலாகலமாக நடந்தது. முடிசூட்டு விழாவுக்கு எலிசபெத் ராணி தங்கமயமான கோச்சு வண்டியில் கணவர் எடின்பரோ கோமகனுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்துக்கு முன்பாக குதிரைப்படை, காலாட் படை, பாண்டு வாத்தியக்குழு ஆகியவை அணிவகுத்து சென்றன. ரோட்டின் இருபுறமும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
ஊர்வலம் காலை 9:27 மணிக்கு புறப்பட்டது. கடும் குளிர் வாட்டியது. இடைஇடையே மழை தூறல் போட்டது இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உடலில் போர்வையை போர்த்திக் கொண்டும், பத்திரிகை காகிதங்களை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டும் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தார்கள். ஊர்வலத்தை காண வழி நெடுகிலும் 50 லட்சம் மக்கள் கூடினார்கள்.
சில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. பெண்களும், குழந்தைகளும் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். இந்த முடிசூட்டு விழாவில் பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 8 நாட்டு பிரதமர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் அவர்களும் பவனியாக சென்றார்கள்.
11:32 மணிக்கு ஊர்வலம் மாதா கோவிலை சென்றடைந்தது. இங்கிலாந்தின் தலைமை கிறிஸ்தவ பாதிரியார் (ஆர்ச் பிஷப்) முடிசூட்டு வைபவத்தை நடத்தி வைத்தார். சடங்குகள் எல்லாம் முடிந்ததும் வைரக் கற்கள் பதித்த தங்க மகுடம் எலிசபெத்தின் தலையில் சூட்டப்பட்டது.

பிறகு ராணியின் கணவரான எடின்பரோ கோமகன் தனது மனைவிக்கு (எலிசபெத் ராணி) முன்பாக வந்து நின்று முழங்காலிட்டு விசுவாசப் பிரமாணம் செய்தார். "எடின்பரோ கோமகனான நான், உங்களுக்கு அடிபணிகிறேன். உங்களுக்காகவே வாழ்ந்து, உங்களுக்காகவே உயிர் துறக்க இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்" என்று அவர் விசுவாச பிரமாண உறுதிமொழி எடுத்தார்.

எடின்பரோ கோமகனுக்கு அடுத்து ராணியின் உறவினர்களும், பிரபுக்களும் ஒருவர்பின் ஒருவராக சென்று விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தார்கள். மாதா கோவிலில் கூடியிருந்த பிரபுக்களும், மந்திரிகளும், முக்கிய பிரமுகர்களும் ஒன்றுபட்ட குரலில், "கடவுளே! எலிசபெத் ராணியை காப்பாற்றுவாயாக!", "ராணி எலிசபெத் நீடூழி வாழ்க", "ராணி எலிசபெத் சிரஞ்சீவியாக வாழ்க" என்று வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.

மறுநாள் ராணி எலிசபெத் தனது அரண்மனையில் விருந்து அளித்தார். வெளிநாட்டு தூதர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
முடிசூட்டு விழாவின்போது ராணி எலிசபெத்துக்கு சார்லஸ் (வயது 4), ஆனி (வயது 2) ஆகிய இரண்டு குழந்தைகள். பிறகு 1960 ஆண்ட்ரூவும், 1964 இல் எட்வர்டும் பிறந்தனர். பட்டத்து இளவரசரான சார்லஸ், அழகி டயானாவை மணந்து பிறகு விவாக ரத்து செய்ததும், டயானா கார் விபத்தில் பலியானதும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
உலகின் மிகப்பெரும் கோடீசுவரியாக எலிசபெத் மதிக்கப்படுகிறார். 1993 ஏப்ரல் மாதம் முதல் எலிசபெத் தானே முன்வந்து வருமான வரி செலுத்தி வருகிறார். அவர் கட்டும் வருமான வரி ஆண்டுக்கு சுமார் 750 கோடி ரூபாய்.