Thursday, December 17, 2009

மாவீரன் வந்தியத்தேவன்



எப்பொழுதும் எங்கள் மக்கள் மத்தியில் நிலையான இடம்பிடித்துள்ள சக்தி FM வானொலியின் மற்றுமொரு வித்தியாசமான முயற்சி சரித்திர வானொலி நாடகத் தொடர். இதுவரை காலமும் வானொலியில் இவ்வாறான ஒரு சரித்திர வானொலித் தொடர் இடம்பிடித்ததில்லை என்பதை யாரும் மறுக்க முடியாதெனவே நான் கருதுகிறேன். இத்தொடரின் முன்னோட்ட நிகழ்ச்சிகளுக்கே எமது நேயர்களின் வரவேற்ப்பு மிகச் சிறப்பகவுள்ளமை இதன் வெற்றிக்கு சான்றேனலாம்.

இத்தொடர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலையும், இந்திய வரலாறையும், எமது கற்பனையையும் கொண்டு உருவாகும் மிகப் பெரிய தயாரிப்பாகும். இத்தொடரை எழுதி இயக்குபவர் நண்பன் ராஜ்மோகன். சக்தியின் ஏனைய அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இலங்கையின் பிரபலமான நடக்கக் கலைஞர்கள் நடிக்கும் இந்த சரித்திரத் தொடரில் எமது நேயர்களில் நாடக நடிப்பில் ஆர்வமுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து. அவர்களையும் நடிக்கச் செய்ய முயற்ச்சிகள் எடுத்துள்ளோம்.

ஊடகம் என்கின்ற நிலையில் எப்போதும் சக்தி FM தனது போருப்பையுனர்ந்து செயட்பட்டுல்லத்தை அனைவரும் பல சந்தர்ப்பங்களில் பார்த்துள்ளனர். அதேபோன்ற ஒரு சமூக உணர்வோடு எமது நாட்டில் இப்போது நலிவடைந்துவரும் நாடகக் கலையை ஓரளவாவது தலைநிமிரச்செய்யவே இந்த முயற்சி. இதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை எமக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள :
fmvanthiyan.blogspot.com

No comments: